உலக வங்கி சமீபத்தில் “ஆரோக்கியம் நிறைந்த நீண்ட ஆயுள் - மக்கள்தொகை, தொற்றல்லாத நோய்கள் மற்றும் மனித வளம்” என்ற முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மனித நல்வாழ்வின் முக்கிய அம்சங்களையும், எதிர்கால சவால்களையும் ஆழமாக ஆராய்கிறது.
முதியோர் மக்கள்தொகை அதிகரிப்பு
உலக அளவில் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. 2023-ல் 6.1 கோடியாக இருந்த இறப்புகள் 2050-ல் 9.2 கோடியாக உயரும் என கணிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, தொற்றல்லாத நோய் களுக்கான சிகிச்சை தேவையும், நீண்டகால பராமரிப்பு அவசியமும் பெருமளவில் அதிகரிக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் சரியான முன்னேற்றங்களை எட்டினால், 2050-ம் ஆண்டுக்குள் 2.5 கோடியாக இறப்புகளை தடுக்க முடியும்.
இந்தியாவின் நிலை
இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 14 கோடி ஆகும். இது சீனாவின் 25 கோடி வயதானவர்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும், இந்தியாவில் முதியோர் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
முக்கிய நோய்கள் மற்றும் அதன் தாக்கங்கள்
இருதய நோய்கள், புற்றுநோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் நீரிழிவு ஆகியவை முதியோர்களை அதிகம் பாதிக்கும் நோய் களாக உள்ளன. இந்நோய்களால் குடும்பங் களில் வறுமை அதிகரிக்கிறது, இறப்புகள் உயர்கின்றன, மற்றும் பொருளாதார வளர்ச்சி யிலும் பாதிப்பு ஏற்படுகிறது. 1990-ல் தொற்றல் லாத நோய்களால் ஏற்பட்ட இறப்புகள் 40 சதவீதமாக இருந்தது, 2030-ல் இது 75 சத வீதத்திற்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படு கிறது.
காரணங்களும் ஆபத்து காரணிகளும்
தொற்றல்லாத நோய்கள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன:
- எளிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள்
- புகையிலை மற்றும் மது பயன்பாடு
- உடல் பருமன்
- உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை
- மரபணு காரணிகள்
- குறைந்த உடல் நிறை குறியீட்டு எண்
சமூக பாதுகாப்பு திட்டங்களின் நிலை
ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் முக்கியமானவை. இருப்பி னும், இவற்றில் பல சவால்கள் உள்ளன: - தகுதி இல்லாதவர்கள் பயன்படுத்துதல் - மருத்துவமனைகளை தேர்வு செய்வதில் தாமதம் - முறையற்ற அறுவை சிகிச்சைகள் - நிர்வாக முறைகேடுகள் - போதிய நிதி ஒதுக்கீடு இன்மை தீர்வுகளும் பரிந்துரைகளும் 1. தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்துதல்: - விலை நிர்ணய அளவுகோல்கள் - செலவு வெளிப்படைத்தன்மை - கட்டுப்பாடுகளை உறுதியாக அமலாக்கல் 2. தனிநபர் நடவடிக்கைகள்: - ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் - உடற்பயிற்சி - புகையிலை பழக்கத்தை கைவிடுதல் 3. அரசின் பங்கு: - ஆரோக்கியமற்ற பொருட்கள் மீது வரி விதிப்பு - சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல் - காப்பீட்டு திட்டங்களின் செயல்திறனை உயர்த்துதல்
எதிர்கால இலக்குகள்
எதிர்கால இலக்குகள் 2030-க்குள் அகால மரணங்களை மூன் றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்பது முக்கிய இலக்கு. இதற்கு: - தரமான சுகாதார சேவை - அனைவருக்கும் மலிவான மருத்துவ வசதி - நோய் தடுப்பு நடவடிக்கைகள் - விழிப்புணர்வு அதிகரிப்பு ஆகியவை அவசியம். ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்பது தனிநபர், சமூகம் மற்றும் அரசு ஆகிய அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். இதற்கான கொள்கை சீர்திருத்தங்களும், அவற்றின் உறுதியான அமலாக்கமும் அவசியம். தி இந்து (13/11/24) ஏட்டில் ராகவ் கைஹா, வித்யா உன்னிகிருஷ்ணன், வாணி எஸ். குல்கர்னி ஆகியோர் எழுதிய கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் : கடலூர் சுகுமாரன்