சென்னை, ஜன. 16- தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது வலைகளும், படகுகளும் உடைத்து சேதப்படுவதையும் ஒன்றிய பாஜக அரசு மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்து வருகிறது என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் ஞாயிறன்று (ஜன. 14) இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த 12 மீனவர்களும் எல்லை தாண்டி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட் டுள்ளனர். மீனவர்களை கைது செய்த கடற்படை யினர், அவர்களிடம் இருந்த மீன்பிடி வலை களை அறுத்தெறிந்து நாசம் செய்துள் ளனர். படகுகளை அபகரித்து எடுத்துச் சென்றுள்ளனர். அண்மையில் நாகை மாவட்ட மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற இந்தச் சம்பவம் மீனவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்கு தலும் நிறுத்தப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான முறையில் இலங்கை அரசுடன் ராஜீய முறை அழுத்தம் தந்து தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக் கப்பட வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்க ளது வலைகளும், படகுகளும் உடைத்து சேத ப்படுவதையும் பாஜக ஒன்றிய அரசு மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர் நலனை பாதுகாக்காத ஒன்றிய பாஜக அரசின் அலட்சியப் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மீனவர்களை விடுவித்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.