சென்னை, ஜூன் 25- ஒன்றிய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டா ர்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல் படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளி யாகியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசின் திருத்தம் வீடு களுக்கு பொருந்தாது என்று தமிழ் நாடு மின்சார வாரியம் அறிவித் துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழ் நாடு ஒழுங்குமுறை ஆணை யத்திற்கு மட்டுமே உள்ளது. மாலை நேர உச்ச காலங்களில் 20 விழுக்காடு மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்யும் ஒன்றிய அரசின் விதியால், தமிழ்நாட்டில் வீட்டு நுகர் வோர்கள் பாதிக்கப்பட மாட்டார் கள் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டு ள்ளது. மேலும் தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்சநேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர் வோர்களுக்கு நிர்ணயம் செய்யப் படவில்லை என்றும் கூறியுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராததொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.