கோவை, ஜூன் 17- கோவை சிவானந்தகாலனி பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில், செந்தில் பாலாஜியின் கைது பின்னணி யில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. எவ்வளவு அச்சுறுத்தினாலும் தாங் கும் அளவிற்கு இந்த இயக்கம் பக்கு வப்பட்ட இயக்கம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூன்றும் பாஜகவின் திரிசூலமாக உள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்ட திருப்பம் இந்தியா முழுவதற்கும் வரும். திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென தலைமை செயல கத்திற்குள் சென்றுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கிற்கு, ஊழல் என மிகப்பெரிய புரளியை கிளப்ப தலைமை செயல கத்திற்குள் நுழைந்துள்ளார்கள். விபரம் தெரியாத மக்களை குழப்ப வேண்டும் என இதனை செய்கிறார்கள். 18 மணி நேரம் விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியை நோயாளியாக ஆக்கியுள்ளார்கள். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. 2024 ல் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என ஜோசியக்காரர்கள் சொல்லியுள்ளார் கள். அதனால் தேர்தலை வைக்க நினைக்கிறார்கள். அமலாக்கத் துறை, வங்கி அதிகாரி களை அழைத்து செல்ல எந்த சட்டத்தில் அதிகாரம் உள்ளது? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது என ஆளுநர் சொல்ல எந்த சட்டத்தில் அதிகாரம் உள்ளது? குற்ற மற்றவர் என நிரூபிக்க சட்டப்படி செந் தில் பாலாஜிக்கு பல வாய்ப்புகள் உள்ளது. அமித்ஷா மீது வழக்கு போட்ட போது, குஜராத் மாநில அமைச்சராக தான் இருந்தார். வழக்கு இருந்தாலும் அமைச்சராக இருக்க குஜராத் மாடலே உதாரணமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகம் ஆயத்தமாகி விட்டது. எப்படியாவது அச்சுறுத்த நினைத்தால் ஏமாந்து போவீர்கள் என்றார்.