states

இரவில் விசாரணை நடத்தக் கூடாது

சென்னை, மே 3-  சென்னை, திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப் பட்ட 2 விசாரணை கைதிகள் மரண மடைந்ததையடுத்து வழக்கில் கைதான வர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும். இரவில் விசார ணை நடத்தக் கூடாது என காவல்துறை யினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் கைது  செய்யப்பட்டு விக்னேஷ் என்பவரை  வைத்து நடத்தப்பட்ட விசாரணை யின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மூன்று காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  இதேபோல திருவண்ணாமலையில் சாராய விற்பனை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் உடல் நிலை சரியில்லாததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் இதுபோன்று உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்து கொண்டே இருந்தது. இதனை தடுக்கும் விதமாக தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை தமிழகம் முழு வதும் உள்ள காவல்துறை அதிகாரி களுக்கு அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், குறிப்பாக இரவு நேரங்களில் விசாரணை கூடாது  என்ற ஒரு உத்தரவு அவர் பிறப்பித்துள் ளார். பெரும்பாலும் குற்றவாளிகளை கைது செய்யும் போது, அவர்களை மாலைக்குள்ளாக சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.