states

பயிர்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும்

சென்னை,நவ.15- தமிழகத்தின் 27 மாவட்டங்க ளில் பயிர்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று  ஒன்றிய வேளாண்துறை அமைச் சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- வடகிழக்குப் பருவமழையி னால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை பார்வை யிட்டு ஆய்வு செய்தேன். செப்டம் பர் 15 முதல் தொடங்கிய சிறப்பு (சம்பா, தாளடி, பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை சிறப் பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது  சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதி வினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இடை விடாத மழை பெய்து வருவதா லும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை காரணமாக பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட நவ.15-ம் தேதி என்ற காலவரம்பினை, நவ.30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தஞ்சாவூர் , நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, இராமநாத புரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப் படும் இரண்டாம் போக நெல் (சம்பா, தாளடி, பிசானம்) சாகு படிக்கான பயிர்க் காப்பீடு செய்வ தற்கான காலக்கெடுவினை நவம்பர் 15 ஆம் தேதியிலிருந்து, 30 ஆம் தேதி வரை நீட்டிக்க  வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.