states

img

தமிழக - கேரள முன் மாதிரியை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் - எம்.பி. ராஜேஷ், கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர்

இங்கிருக்கும் அனைவரும் ஒரே மாதிரி யான உடை அணிந்திருக்கவில்லை. அவரவர் வாழ்க்கை முறையில் வேறுபாடு கள் இருக்கலாம். ஆனால் எண்ணத்தில், சிந்த னையில், செயலில் நாம் ஒன்றுபட்டு இருப்ப வர்கள். இயற்கை என்பதே வேறுபாடுகளை தன்னகத்தே உள்ளடக்கியதுதான்.  ஆகவே வேற்றுமை என்பது இயற்கையின் நியதி ஆகும். தோட்டங்கள் பலவிதமான வண்ணங்களிலான மலர்களைக் கொண்டதாக இருக்கிறது. அது  நம் கண்ணுக்கும், பார்வைக்கும், மனதிற்கும் மகிழ்ச்சியை, குளிர்ச்சியைத் தருவதாக இருக்கும். எனவே எந்தவொரு விசயத்திலும் வேற் றுமை என்பது அழகையும் உள்ளடக்கியதாகும்.

அது இயற்கையாக இருந்தாலும் சரி, மனித குல வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி.  உலகத்தில் பிரபலமான அத்தனை மதங் களும் இந்திய மண்ணில் இருக்கின்றன.  6  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படு கின்றன. உலகில் வேறு எந்த நாடும் இவ்வளவு வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கக் கூடிய சமூக அமைப்பைக் கொண்ட நாடாக இல்லை. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த போது, அவர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையில் சாதி, மத, இன வேற்றுமைகளைக் கடந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும்; நாடு விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு வேற்றுமைகளை எல்லாம் களைந்து நம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியது. அதுதான் இந்திய தேசத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.    2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அதிகாரத் திற்கு பாஜக வந்த பிறகு,இந்த தேசத்தின் அரசு எந்திரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னு டைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வந்த இந்திய தேசத்தை   இந்தி, இந்து, இந்துஸ்தான்; ஒரு  மொழி, ஒரு மதம், ஒரு நாடு என்கிற அவர்களுடைய முழக்கத்தை செயல்படுத்துவதற்கான அனை த்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மாநில கூட்டாட்சித் தத்துவத்தை குழி  தோண்டிப் புதைத்து அனைத்து அதிகாரத்தை யும் ஒன்றிய அரசின் கையிலே, தில்லியிலே மையப்படுத்தி குவித்திட வேண்டும் என்பதைத் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மதவாத சக்திகள் இந்திய தேசத்தை, மக்க ளை மதத்தின் பெயராலும், சாதியின் பெயரா லும் பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அதனால் தான் மணிப்பூரில் மதக்கலவரம், இனக்கலவரம் நடைபெற்றது. இந்த பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாகத் தான் ஹரியானாவில், உத்தரப்பிரதேசத்தில் மதக்கலவரங்கள், மத மோதல்கள் நடந்து வரு கின்றன. சிறுபான்மை மக்கள், வசிக்கக் கூடிய பகுதிகளில் புல்டோசர்களைக் கொண்டு  அவர்களுடைய வசிப்பிடங்கள் இடித்து நொறுக் கப்படுகின்றன. இந்த ஆட்சியாளர்களின் இத்த கைய மதவாதக் கொள்கைக்கு எதிராக, செயல் பாடுகளுக்கு எதிராகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தக் கூடிய எழுத்தாளர்கள், பத்திரி கையாளர்கள்,

சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை வேண்டுபவர்கள் என அனைத்து  பிரிவினரும் அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர். ஒருபுறம் சாதியின், மதத்தின் பெயரைச் சொல்லி ஆர்எஸ்எஸ் போன்ற மதவாத அமை ப்பு பிரித்துக் கொண்டிருக்கும் போது; மறுபுறம் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு இந்த தேசத்தின் வளங்களை, விவசாயத்தை, தொழிலை, பொருளாதாரத்தை கார்ப்பரேட்டு கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொண்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் தொழி லாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா ஆகிய ஒரு சில மாநி லங்களில் தான் இவர்கள் விரும்பக் கூடிய வகையிலான மத மோதல்கள் நடைபெறா மல் மக்கள் அமைதியாகவும், மனித நேயத்தோ டும் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். ஏனெ ன்றால் தமிழகமும், கேரளாவும் ஜனநாய கம், மதச்சார்பின்மைக் கொள்கையில் உறு தியான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டி ருக்கின்றன. எனவே நம்முன் இருக்கக்கூடிய கடமை என்பது மதச்சார்பற்ற ஜனநாயகக் கோட் பாட்டை நம்முடைய மாநிலங்களில் முன் னெடுத்துச் செல்ல வேண்டும். மதச்சார்பற்ற ஜன நாயக ஆதரவான சக்திகளை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்த முன்மாதிரியை தமிழகம், கேரளா தாண்டி இதர மாநிலங்களுக்கும் இந்த மாற்று முன்மாதிரியை முன்னெடுத்துச் சென்று ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்த தேசத்தின் சிறப்பம்சத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதற்கான அரசியல் கடமையையும் ஆற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும்.