states

அரசியல் சாசன முகவுரையை பொது இடங்களில் காட்சிப்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு!

புதுதில்லி, அக்.1- அரசியல் சட்டத்தின் முகப்புரையை, பொது இடங்களில் காட்சிப்படுத்த உத்தர விட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டி ருந்த பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் அகமது பீர்சாடே. இவர்,  உச்ச நீதிமன்றத்தில் மனு  ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  “நாட்டில் அதிகரிக்கும் மத மோதல்களை தடுக்கவும், சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வற்றின் உணர்வை மேம்படுத்தவும், அனைத்து மாநிலங்களிலும், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில், அந்தந்த மாநில மொழி களில், அரசியல் முகப்புரையின் உள்ளடக்  கங்களை காட்சிப்படுத்த அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். “நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத வன்முறை வழக்குகள், வெறுப்பு குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து வருவதற்கு, நமது அரசியலமைப்பின் அடித்தளம் எந்த உறுதிப்பாட்டின் மீது வகுக்கப்பட்டுள்ளது என்பதை, நமது நாட்டின் இளைஞர்கள் அறியாததே காரணம்” என்றும் அவர் கவலை தெரிவித்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய  உச்சநீதிமன்ற அமர்வு முன்பு வெள்ளிக்கிழ மையன்று விசாரணைக்கு வந்தது. அப்  போது, ‘இதுகுறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறிய நீதிபதிகள், மனு தாரரே இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், நாங்  கள் தள்ளுபடி செய்வோம் என்று அறி வித்தனர். இதையடுத்து, அகமது பீர்சாடே வின் வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.