states

img

ஒமைக்ரான் எந்த வடிவத்தில் வந்தாலும் மாநில அரசு தடுக்கும்: அமைச்சர்

சென்னை,ஏப்.12- ஒமைக்ரான் ‘எக்ஸ் இ’ உள்பட எந்த  வைரஸ் வந்தாலும் தடுக்க தமிழகம் தயாராக இருக்கிறது என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி  நேரம் முடிந்ததும், உரு மாறிய கொரோனா வைரஸ் குறித்து அதிமுக  உறுப்பினர் விஜய பாஸ்கர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, “வெளி நாடுகளில் உருமாறிய கொரோனா 10 விழுக்காடு வரை வேகமாக பரவி  வரும் நிலையில் ஒமைக்ரான் எக்ஸ்  இ பரவுவதை கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஜூன் மாதம் இந்த உருமாறிய கொரோனா பரவும் என கணிக்கிறார் கள். மேலும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்கள் உஷார்படுத் தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில்  அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேட்டார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:- கொரோனா உருமாற்றம் டெல்டா,  டெல்டா பிளஸ், ஒமைக்ரான்  என பல பெயர் உருமாற்றத்துடன் 7  வகையானவைரஸ் பரவி உள்ளது. தற்போது எக்ஸ் இ என்ற வைரஸ் ஒமைக்ரானைவிட 10 விழுக்காடு வேகமாக பரவுகிறது என்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு டிசம்பரில் முதல்  கொரோனா தொற்று உருவானது. 2020- கேரளா மாநிலம் திருச்சூரில் பரவி யது. 2020 மார்ச் 7-ல் தமிழ்நாட்டில் முதல் கொரோனா தொற்று கண்டறி யப்பட்டது. \

அதன் பிறகு படிப்படி யாக பரவியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த பெரு முயற்சியால் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்தது. 3-வது அலை  வரும் என எதிர்பார்த்த நிலையில் அந்த அளவு இல்லை. தற்போது கொரோனா  மிக வேகமாக குறைந்துவிட்டது. சென்னை வந்து இருந்த தடுப்பூசிக் கான ஆலோசனை குழுதலைவர் அரோ ராவை சந்தித்தேன். அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இங்கிலாந்தில் ‘எக்ஸ் இ’ கொரோனா 627 பேருக்கு வந்து உள்ளதாகவும், குஜராத், மராட்டியத்திலும் பரவி உள்ளதாக தெரிவித்தார். இதை தடுக்க தடுப்பூசிதான் சிறந்த  வழி. இதன் காரணமாக சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர் களை பரிசோதிக்க தொடங்கி உள்ளோம். ரூ. 365 கோடியில் 2,096 அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் தொடங்கப்படு கிறது. தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாக நடத்தி வருகிறோம். உலகம் முழுவதும் புதிய வகை  கொரோனா உச்சத்துக்கு வந்தா லும் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி இயக்கத்தை  மக்கள் ஒத்துழைப்புடன் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். புதிய புதிய வடித்தில் வைரஸ் உரு மாறி வந்தாலும் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து தயாராக  உள்ளது.  உலகம் முழுவதையும் அச் சுறுத்தி வந்தாலும் அதிலிருந்து தமிழகம் மீண்டு வரும். மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.