ஒன்றிய-மாநில அரசுகளைப் போன்று, உள்ளாட்சி அமைப்புகள் மூன்றாவது அரசாங் கம் ஆகும். ஒன்றிய அரசிடம் ஏராள மான அதிகாரங்கள் உள்ளன. அவ ற்றைப் பகிர்ந்தளிக்குமாறு மாநில அரசுகள் கேட்கின்றன. ஆனால், அதே மாநில அரசுகள், தங்களின் அதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரம் இன்றி, கைகள் கட்டிப்போடப்பட்டவர்களாக எது வும் செய்ய முடியாமல் உள்ளனர். சாதாரண செலவைக்கூட ஒன்றிய - மாநில அரசு அதிகாரிகளின் அனு மதி பெறாமல் செய்ய முடிவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் உரு வாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் 73, 74-ஆவது திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டதன் நோக்கங் களுக்கு மாறான நிலை தற்போது உள் ளது. எனவே, உள்ளாட்சி அமைப்பு களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். மாநிலத்தில் நிதிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும்! நிதிக்குழு ஒன்றை அமைத்து ஆண்டுதோறும் அரை விழுக்காடு, ஒரு விழுக்காடு என்று நிதி ஒதுக் கீட்டின் அளவை அதிகரிக்கும் ஏற் பாடு மாநில அரசிடம் இல்லை. எனவே, உள்ளாட்சி அமைப்பு களுக்கு மாநில அரசின் வரி வரு வாயில் மூன்றில் ஒரு பங்கு நிதியை ஒதுக்க வேண்டும். சாலை அமைப்பது, குடிநீர் வழங்குவது, சுகாதார மற்றும் மருத்துவ சேவை அளிப்பது என அனைத்து அடிப்படைப் பணிகளை யும் உள்ளாட்சி அமைப்புகள் தான் செய்கின்றன. உள்ளாட்சி அமைப்பு களை பட்டினி போட்டுவிட்டு, மாவட்ட நிர்வாகமே அனைத்துப் பணிகளையும் செய்வதால் பல முறைகேடுகள் நடக்கின்றன. மாநகராட்சிகள் ஆக்குவதால் பறிபோகும் நூறுநாள் வேலை! ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சிகள் உரு வாக்கப்படுகின்றன. இதனால் ஊராட்சிகளுக்கு உள்ள பலவித உரிமை, சலுகைகள் பறிக்கப்படு கின்றன. ஒன்றிய அரசு நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க நினைக்கிறது. ஊராட்சிகளை பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கும்போது, நூறுநாள் வேலை திட்டத்தை அங்கு செயல் படுத்த முடியாத நிலை உரு வாகிறது. ஊராட்சிகளின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக பிற உள்ளாட்சிகளோடு இணைக்கும் முடிவை அரசு எடுக்கக்கூடாது.
தனியார்மயத்தைக் கைவிட வேண்டும்!
மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப்பணி முழுவதையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கை வேகமாக நடக்கிறது. தனியார்மயம் கொள்ளைக்குத்தான் வழி வகுக்கும். கடைக்கோடி மனிதர் களான தூய்மைப் பணியாளர் களின் நிரந்தர ஊதியம், பணி நிரந்தரம் பறிக்கப்படுகிறது. 30 ஆண்டுகள் பணியாற்றினால் கூட அத்தொழிலாளர்கள் பணி நிரந்த ரம் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, தனியார்மயத்தை முழுமை யாக கைவிட வேண்டும்.
சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்!
வரி விதிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் மாநில அரசு, தீர்மானங்களை நிறைவேற்றி கட்ட ணத்தை உயர்த்த நிர்ப்பந்திக்கிறது. ஆண்டுதோறும் சொத்துவரியை 6 விழுக்காடு உயர்த்த கட்டாயப் படுத்துகிறது. இதனால் மக்கள் சொத்துவரியைக் கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே மாநில அரசு, தமக்குக் கீழுள்ள உள்ளாட்சி களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும். காவல்துறையே தண்டனை தருவது கண்டனத்திற்குரியது காவல்துறை தானடித்த மூப்பாக மேற்கொள்ளும் என்கவுண்ட்டர் நடைமுறை, ஜனநாயகத்திற்கு விரோதமானது, என்கவுண்ட்டர் செய்யும் அதிகாரம், உரிமை காவல் துறைக்கு கிடையாது. குற்றச்சாட்டு பெரியதாக இருந்தாலும், நீதி மன்றம் வாயிலாகவே தண்டனை பெற்றுத்தர வேண்டும். காவல்துறை யே தண்டனை வழங்குவது பொரு த்தமற்றது. கண்டனத்திற்குரியது. சென்னையில் செவ்வாயன்று நடைபெற்ற சிபிஎம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து...