states

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்!

சென்னை, ஜன. 28 - மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர் கள் இல்லை என்ற அமைச்ச ரின் கூற்றை திரும்பப் பெற  வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமை ப்பு (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் தி. ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் உள்ளிட்ட நிர்வாகிகள், இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் கூறுகையில், “மின்வாரியத்தில் 62 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள் ளன. களப்பிரிவில் மட்டும் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப் பப்படாததால், ஒப்பந்த ஊழி யர்களை வைத்தே பணிகள் நடைபெறுகின்றன” என்றனர். ஒப்பந்த ஊழியர்கள் இல்லை என்ற அமைச்ச ரின் அறிவிப்பு அதிர்ச்சிய ளிப்பதாகவும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு எதி ராக உள்ளதாகவும் தெரி வித்தனர்.  “ஸ்மார்ட் மீட்டர் திட் டத்தால் ஊழியர்களுக்கும் நுகர்வோருக்கும் என்ன பலன் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்” எனவும், இத்திட்டத்தை TOTEX முறையில் தனியாருக்கு வழங்காமல் CAPEX முறை யில் கேரளத்தைப் போல தமிழக மின்வாரியமே செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் 2025 பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிக ளில் தஞ்சாவூரில் நடைபெ றும் மாநில செயற்குழு கூட் டத்தில் தொடர் போராட்டங் கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினர்.