புதுதில்லி, ஜூன் 8 - நடப்பு நிதியாண்டிலும் பணவீக்க ஆபத்து தொடர்வதாகவும், விலைவாசி உயர்வு கடுமையாகவே இருக்கும் என் றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அபாய எச்சரிக்கை செய்துள்ளார். நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான பண வீக்க வரம்பை 5.7 சதவிகிதமாக நிர்ண யித்துள்ள நிலையில், அது தற்போது 6.7 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தால் மட்டுமே பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடுமையாக உயர்ந்த விலைவாசி
இந்தியாவில் விலைவாசி உயர்வா னது, முன்னெப்போதும் இல்லாத அள விற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு தானி யங்கள், தக்காளி, உருளைக் கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள், ஆப்பிள், பப்பாளி உள்ளிட்ட பழங்கள், சமையல் எண்ணெய் வகைகள், அயோடின் உப்பு, இறைச்சி, ஆடைகள், காலணி, போக்குவரத்து, தகவல் தொடர்பு செல வினங்கள் என அனைத்தின் விலை களும் முன்னெப்போதும் இல்லாத உச்சத் திற்குச் சென்றுள்ளன. விலைவாசியுடன் தொடர்புடைய நுகர் வோர் பணவீக்க விகிதம் (Consumer Price Inflation) எனப்படும் சில்லரைப் பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவிகிதமாக இருந்தது, ஏப்ரலில் 0.84 சத விகிதம் அதிகரித்து, 7.79 சதவிகிதமாக உயர்ந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ர லில் 4.23 சதவிகிதம் என்ற அளவிலேயே சில்லரைப் பணவீக்கம் இருந்தது. அத னோடு ஒப்பிடுகையில், ஓராண்டில் மட்டும் 3.56 சதவிகிதம் அளவிற்கு பணவீக்கம் உயர்ந்தது. இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் சில்லரைப் பணவீக்க அளவு 8.33 சதவிகிதத்தை எட்டியதே அதிகபட்ச மாக இருந்தது. அது 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஏப்ரலில், 7.79 சதவிகிதம் என்ற இரண்டாவது அதிகபட்ச பண வீக்க அளவை எட்டியது. உணவுப் பொருட்களுக்கான பண வீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவிகித மாக இருந்த நிலையில், அது ஏப்ரலில் 8.38 சதவிகிதமாகவும், எரிபொருட்களுக் கான பணவீக்கம் 7.52 சதவிகிதத்திலிருந்து 10.80 சதவிகிதமாகவும் அதிகரித்தது. உணவு மற்றும் அருந்தும் பானங்களுக் கான விலைவாசி மார்ச் மாதத்தில் 7.47 சத விகிதமாக இருந்தது, ஏப்ரலில் 8.1 சத விகிதமாக உயர்ந்தது. காய்கறிகளுக் கான பணவீக்கம், மார்ச் மாதத்தில் 11.6 சத விகிதத்திலிருந்து ஏப்ரலில் 15.4 சதவிகித மாக அதிகரித்தது. இதேபோல எண் ணெய் மற்றும் கொழுப்புகளின் விலை வாசியும் 17.3 சதவிகிதத்தில் இருந்து 18.8 சதவிகிதமாகவும், இறைச்சி மற்றும் மீன் விலைவாசி 7 சதவிகிதத்திலிருந்து 9.63 சதவிகிதமாகவும் ஏப்ரலில் உயர்வு கண்டன.
பெட்ரோல், டீசலுடன் போட்டிபோட்ட தக்காளி
குறிப்பாக, தக்காளியின் விலை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தில்லியில் 15 ரூபாய்க்கு (ஒரு கிலோ) விற்பனையான தக்காளி, தற்போது 39 ரூபாயாகி இருக்கிறது. அதேபோல, மும்பையில் கிலோ 28 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது கிலோ 77 ரூபாய்க்கும், தமிழ் நாட்டில் கிலோ 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதேபோல ரூ. 16 முதல் 18 வரை விற்கப்பட்டு வந்த உரு ளைக்கிழங்கு தற்போது 27 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இந்தக் காலத்தில் வெங்காயத்தின் விலை மட்டுமே சற்று ஆறுதலாக இருந்துள்ளது. மார்ச் மாதத்தில் வெறும் 8 சதவிகித மாக இருந்த போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புக்கான கட்டணங்கள் ஏப்ரல் மாதத்தில் 11 சதவிகிதத்தைத் தொ ட்டது. அதேபோல மார்ச் மாதத்தில், 9.40 சதவிகிதமாக இருந்த குடும்பங்களின் ஆடை மற்றும் காலணிகளுக்கான செல வினம், ஏப்ரல் மாதத்தில் 9.85 சதவிகித மாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் காலணி விலைகள் 12.12 சதவிகிதமும், ஆடைகளின் விலைகள் 9.51 சதவிகித மும் உயர்வு கண்டன. இதேபோல மொத்த விலை அடிப் படையிலான பணவீக்கமும் (Wholesale Price Index -WPI) 2022 ஏப்ரலில், முந்தைய 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் 10.49 சதவிகிதத்தை தொட்டது. மேலும், 2021 மார்ச் மாதத்தில் 7.39 சதவிகிதமாக இருந்த மொத்தவிலைப் பணவீக்க விகிதம் (WPI), ஒரே ஆண்டில் மார்ச் மாதத்தில் 10.49 சதவிகிதமாக அதிகரித்தது.
ரெப்போ விகிதம் அதிகரிப்பு
ரிசர்வ் வங்கியானது 2022 மே 2 முதல் 4 வரை நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தின்போதே, ரெப்போ வட்டி விகிதத்தை (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டியின் விகிதம்) 40 அடிப்படைப் புள்ளிகள் (0.4 சதவிகிதம்) அதிகரித்து 4.40 சதவிகிதமாக நிர்ண யம் செய்திருந்தது. எனினும், பணவீக்கத் தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது ஜூன் 7, 8 தேதி களில் மும்பையில் நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கியின் ‘ரெப்போ ரேட்’ (Repo Rate) விகிதம் 0.50 புள்ளிகள் உயர்த்தப்படுவ தாகவும், இந்த வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டிலும் பணவீக்க ஆபத்து தொடர்வதாக எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியானது (Reserve Bank Of India), பிற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான அடிப்படை வட்டிதான் ‘ரெப்போ ரேட்’ (Repo Rate) எனப்படும் நிலையில், இந்த வட்டி விகிதம்தான் தற்போது 4.40 சதவிகிதத்திலிருந்து 4.90 சதவிகித மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாணயக் கொள்கைக்குழு கூட்டத்திற்குப் பின், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட் களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண் ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போரால் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவிகிதமாக இருக்கும். முன்னதாக இது 5.7 சத விகிதத்திற்கு உள்ளேயே இருக்கும் என கணிக் கப்பட்டிருந்தது. எனவே, இப்போதும் பணவீக்க ஆபத்து தொடர்கிறது. பெட்ரோல், டீசல் விலை யை குறைத்தால் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. தக்காளி விலையின் சமீபத்திய அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை ஆகியவை பணவீக் கத்தை தூண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல், மே, ஜூன்) பணவீக்கம் 6 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும். தற்போதைய உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கி றது. பொருளாதார மீட்சி, வேகத்தை எட்டியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்ற கணிப்பில் மாற்றம் இல்லை” என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
அதிகரிக்கும் இஎம்ஐ
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித அதி கரிப்பால், தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாக னக்கடன் உள்ளிட்ட பல்வேறு வங்கிக் கடன்களுக் கான வட்டி விகிதங்கள், இஎம்ஐ கட்டணங்கள் அதி கரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கி யிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்று, அந்த தொகையைத்தான் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என பல வகைகளில் கடன் களை வழங்குகின்றன. கடந்தமாதக் கணக்கீட்டின் படி 4.40 சதவிகிதம் என்ற குறைந்த வட்டிக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி, அதனை வெளியில் 7 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரையிலான வட்டிக்கு கடன் கொடுத்து வந்தன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அடிப்படைக் கடன்களுக்கான வட்டியை 4.40 சதவிகிதத்தில் இருந்து 4.90 சதவிகிதமாக உயர்த்தியுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கி கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங் கும் கடன்களுக்கான வட்டியையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கடன் வாங்கி யவர்கள், வாங்குபவர்களின் இஎம்ஐ-களில் (Equated Monthly Instalment - EMI) நேரடி தாக் கத்தை ஏற்படுத்த உள்ளது.
வீட்டுக் கடன்களை எடுத்துக் கொண்டால், 7 சதவிகித வட்டியில் ஒருவர் 30 லட்சம் ரூபாய் கடனை, 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் பெற்றிருப்பாரானால், அவருக்கான சம மான மாதாந்திர தவணைத் தொகை (EMI) 1648 ரூபாய் வரை அதிகரிக்கும். அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு சுமார் 55 ரூபாய் வட்டி அதிகரிக்கும். வீட்டுக் கடனை போலவே வாகன கடன்களை 10 முதல் 10.9 சதவிகித வட்டியில், 8 லட்சம் ரூபாயை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் பெற்றவர்களின் மாதாந்திர தவணைத் தொகை சுமார் 375 ரூபாய் வரை அதிகரிக்கும். 14 முதல் 14.9 சதவிகிதம் வரையிலான வட்டி யில் 5 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடனாகப் பெற்றவர்கள், மாதாந்திர தவணைத் தொகையில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் 235 ரூபாய் வரை கூடுத லாக செலுத்த வேண்டியதிருக்கும். இது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். இஎம்ஐ தொகையானது, வங்கிகளுக்கு ஏற்ப வும், வாங்கிய கடன்களின் தன்மைக்கேற்பவும் மாறுபடும். மேலும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதானாலேயே, பிற வங்கி களும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாய மில்லை. அது அந்தந்த வங்கிகளின் முடிவுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில், கடந்த இரண்டு ஆண்டு களாக ‘ரெப்போ ரேட்’ எந்த மாற்றமும் செய்யப் படாமல் 4 சதவிகிதமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது, கடந்த 2022 மே மாதத்தில்தான் 0.40 புள்ளி கள் உயர்த்தப்பட்டது. தற்போது ஜூனில் மேலும் 0.50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரும் ஆகஸ்ட் மாதத் தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.35 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் இப்போதே எச்சரிக்கை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.