நவ.11- ராகுல் நடைப்பயணத்தில் சரத் பவார் பங்கேற்பு!
பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு எதிராக, இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை (பாரத் ஜோடோ) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியா குமரியில் துவங்கிய இந்த நடைப்பயணம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நுழைந்துள்ளது. இந்த நடைப்பயணத்தில், நவம்பர் 10 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் படேல், சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதைத்தொடர்ந்து நவம்பர் 11 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனை தலைவர்களில் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
3 பெரும்பணக்காரர்களுக்காகவே பணமதிப்பு நீக்கப்பட்டது!
“இந்தியப் பொருளாதாரத்தை, தனது மூன்று ‘பில்லியனர் நண்பர்களுக்கு’ ஏகபோக மாக்குவதுதான் பிரதமர் மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை. இது, விவசாயிகள் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு தாக்குதல். பண மதிப்பு நீக்கத்தால் கறுப்பு பணம் வெளியே வரும் என்றார். அது வரவில்லை. மாறாக, வறுமைதான் வந்தது. நம்நாடு பணம் இல்லாத பொருளாதாரம் ஆகவில்லை. மாறாக, பொருளாதாரம் பலவீனமானது. ஒழிந்தது பயங்கரவாதம் அல்ல; கோடிக்கணக்கான சிறுதொழில் வேலைகள்தான்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த வேண்டும் - நிதிஷ் வலியுறுத்தல்
“50 சதவிகித இடஒதுக்கீடு என்னும் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய தருணம் வந்திருக்கி றது. ஏனெனில் உச்ச வரம்பானது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் (ஓபிசி), மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் வாய்ப்புகளை இழக்கச் செய்கிறது” என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கூறி யுள்ளார். “தேசிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தி யிருக்கும் அவர், “உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி யிருப்பது நியாயமானதுதான்” என்று வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் விதிமீறல்: மஹூவா புகார்
“நவம்பர் 9 முதல் 15-ஆம் தேதி வரை கூடுதல் நாட்களுக்கு தேர்தல் பத்திரம் விற்பனை செய்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது குஜராத் மாற்றும் இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக கூடுதலாக அநாமதேய நன்கொடை பெறுவதற்கு உதவி செய்யும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி யின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், மஹூவாவின் இந்த டுவீட்டை டேக்செய்து, “இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை” என்று கருத்துப் பதிவிட்டுள்ளார்.
தேசியக்கொடியில் ‘சந்திரன்’; ஒன்றிய அமைச்சர் வெறிப்பேச்சு
மகாராஷ்டிர மாநிலத்தில், மத நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்த கொண்டு, ஒன்றிய இணை யமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் பேசியுள்ளார். அப்போது, “நாம் (இந்துக்கள்) சரியான நேரத்தில் எழவில்லை (எதிர்த்து நிற்கவில்லை) என்றால் நமது தேசியக் கொடியில் சந்திரனின் படம் இருக்கும். நாம் சரியான நேரத்தில் எழுந்தால், சந்திரனில் தேசியக் கொடியை ஏற்றலாம். நான் மதம் அல்லது ஜாதி பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மனிதநேயமே மிகப்பெரிய மதம் என நம்புகிறேன்” என்று பாட்டீல் கூறியுள்ளார். கபில் மோரேஷ்வர் பாட்டீலின் இவ்வாறு கூறும் போது, ஏராளமானோர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று ஆவேச முழக்கங்களை எழுப்பி, அவரது பேச்சை வரவேற்றுள்ளனர்.
போலி சாதிச்சான்றிதழ்: பாஜக ஆதரவு எம்.பி.க்கு பிடிவாரண்ட்
போலி சாதிச்சான்றிதழ் வழக்கில் சுயேட்சை எம்.பி.யும், நடிகையுமான நவ்நீத் கவுருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழில், ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்நீத் கவுர் ராணா. இவர், தன்னை பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி, 2019 மக்களவைத் தேர்த லில் மகாராஷ்டிர மாநிலம் அமராவதி (தனி) தொகுதியில் போட்டியிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் நவ்நீர் கவுர் ராணாவுக்கு செப்டம்பர் மாதமே பிடிவாரண்ட் பிறப்பித்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, மும்பை நீதிமன்றம் தற்போது அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணமதிப்பிழப்பு: வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை
சென்னை,நவ.9- பண மதிப்பிழப்பு குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், “பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பு செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாட்டு மக்களை கடும் துன்பத் திற்கு ஆளாக்கிய அறிவிப்பு வெளி யிட்டு கடந்த ஆறு ஆண்டுகளில் இத னால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் மிஞ்சுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பண மதிப்பிழப்பினால் ஏற்பட்ட விளைவு களையும், பாதிப்புகளையும் ஆய்வு செய்வது மிகமிக அவசியமாகும். இந்தி யாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி 2017-18 இல் 7 விழுக்காடு கடுமையாக சரிந் திருக்கிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடி வருகிறது. இத்தகைய பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப் பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு கள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
மழையால் பலி 28 ஆக அதிகரிப்பு
சென்னை, நவ.9- வட கிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஒருவர் மரண மடைந்திருக்கிறார். அந்த குடும்பத் திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. கனமழையின் காரணமாக இதுவரை 48 கால்நடைகள் இறந் துள்ளன. 59 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நுண்ணுயிரிகளால் பரவும் நோய்களைத் தடுக்க சர்வதேச வழிமுறை : அமைச்சர் வேண்டுகோள்
சென்னை,நவ.9- நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க சர்வதேச அளவில் வழி முறையை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு நடந்த 7-வது உலக சுகாதார மாநாட்டில் பேசியதாவது:- முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த மனித குலமும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொண்டுள் ளது. இதற்காக பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் கூடிய ஒரு வழிமுறையை நாம் உருவாக்க வேண்டும். புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து களின் விலை அதிகமாகவும், பெரும்பாலான மக்களால் வாங்க முடியாதவையாகவும் உள்ளது. இதனால் பெரும் சிக்கலை ஏற்படுத் துகிறது. மருத்துவ நிறுவனங்கள், மருத்து வர்கள், நோயாளிகள், பொதுமக்களுக்கு முறையான மருந்து தேர்வு, முறையான பரிசோதனை, சிகிச்சையின் காலம், தடுப்பூசிகள், விரிவான தொற்று கட்டுப் பாட்டுத் திட்டங்களைக் கற்பிக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள பொதுச் சுகாதார நிறுவனங்களில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் பல மருந்து எதிர்ப்பு உரு மாற்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு சிறந்த புரிதல், கூடுதல் ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு மற்றும் மேலாண் மைக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் உலகளாவிய ஒத்து ழைப்பு ஆகியவை தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘அமேசானைப் பாதுகாப்போம்’
கெய்ரோ, நவ.9- உலகிலேயே மிகப்பெரிய காடான அமேசான் காட்டுப் பகுதியைப் பாதுகாப்போம் என்று வெனிசுலா, சூரினாம் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த 27ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அமைப்புகள் இதில் பங்கேற்றுள்ளன. பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடக்கின்றன. அதோடு, குறிப்பிட்ட நாடுகளோடு சில நாடுகள் ஆலோசனைகளை நடத்தி, அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கான திட்டமிடலும் நடந்து வருகிறது. பூமியைப் பாதுகாக்க நம்முன் நல்ல வாய்ப்பு வந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, சூரினாமின் ஜனாதிபதி சான் சன்டோகி மற்றும் கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ ஆகியோர் அமேசான் மழைக்காடுகள் பற்றி விவாதித்தனர். ஒருங்கிணைப்போடு, திறமையோடு, மிகவும் கவனத்துடன் மற்றும் மீட்புப்பணியில் தீவிரம் ஆகியவை மூலமாக உலகின் மிகப்பெரிய இயற்கைக் காட்டைப் பாதுகாக்க முடியும் என்று மூவரும் ஒருமித்த குரலில் குறிப்பிட்டார்கள். அடுத்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20 கோடி அமெரிக்க டாலரை அமேசான் காடுகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப் போவதாக கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ தெரிவித்தார். இது பற்றி மேலும் பேசிய அவர், “எங்களுக்கு பொறுப்பு உள்ளது. அதனால்தான் அமேசான் மழைக்காடுகளையும், அதன் அழகையும் நாங்கள் பாதுகாத்தாக வேண்டும்” என்றார். உலகின் இதயங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்று சூரினாமின் ஜனாதிபதி சன்டோகி கூறியுள்ளார்.