செஞ்சி, ஜூன் 19- பாடத்திட்டங்களில் புராணம், இதிகாசம் இடம்பெறச் செய்வது மாணவர்களை பிற்போ க்குத் திசையில் இழுத்துச் செல்லும் என்று பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது. செஞ்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் ஞாயிறன்று (ஜூன்19) நடைபெற்றமாநாட்டில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரச மைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே அரசின் மதச்சார்பற்ற தன்மை வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பணி மனை வளாகங்களுக்குள் கோயில் கட்டுவது, ஆயுத பூஜை போன்ற மதப் பண்டிகை களைக் கொண்டாடுவது சட்ட விரோதமானது ஆகையால், மாநில, ஒன்றிய அரசுகள் இதில் உறுதியாக இருந்து தடை செய்ய வேண்டும்.
ஆணவக்கொலைகளை தடுத்திடுக!
இடஒதுக்கீட்டிற்காக சமூகநீதிக் கண்ணோட்டத்தில் சாதி என்று கேட்கப்படும் படிவங்களில் சாதியைக் குறிப்பிடாமல் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. (பி.சி., எம்.பி.சி.), எஃப்.சி என்று பதிவு செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும், ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சமுதாய இயக்கங்கள் ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்தாலும், இதற்கென்று காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி, சாதி, மத மறுப்புத் திருமணங்களைச் செய்து கொள்வோர்க்குத் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சாதி மறுப்பாளர்களுக்கு தனிஇடஒதுக்கீடு
சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கு விக்கும் வகையில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தனி ஒதுக்கீடுக்கு வழி செய்ய வேண்டும், கல்விக் கூடங்களில் தத்தம் சாதியை அடையாளம் காட்டுவதற்காக தனி த்தனி வண்ணத்தில் இருபால் மாணவர்க ளும் கைகளில் கயிறுகளைக் கட்டி வருவ தைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும், மக்கள் மத்தியில் அமைதியான முறையில் பில்லி, சூன்யம், மாந்திரீகம் இவற்றின் மோசடிகளை கலை நிகழ்ச்சிகள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பயன்படுத்தியும், பகுத்தறிவுப் பிரச்சாரம் மூலமும் விளங்க வைக்க வேண்டும் ,
ஊடகங்களுக்கு வேண்டுகோள்
பில்லி, சூனியம், ஏவல், பல்வகை ஜோதி டங்கள், ராசிக்கல், இயந்திரத் தகடு விற்பனை என்று மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்ப ரங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு வதை ஊடகங்கள் நிறுத்திட வேண்டும். அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் வகையில் அறிவியல் சிறப்பு இதழ்களை வெளியிட வேண்டும் உள்பட 12 முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், திராவிடர் கழக மூத்த தலைவர் கலிபூங்குன்றன். முன்னாள் துணைவேந்தர் ஆர்.டி.சபாபதி மோகன் உள்பட பலர் பேசினர்.