states

நிலவில் சந்திரயான்-3 இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி பாயிண்ட்’ என பெயர்சூட்டிய பிரதமர்!

பெங்களூரு, ஆக.26- நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தி லிருந்து விக்ரம் லேண்டர் தரையி றங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி பாயிண்ட்’ (Shiv Shakti Point’) எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரத மர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளி நாட்டில் இருந்து நேரடியாக சனிக் கிழமை காலை பெங்களூரு வந்தார்.  பின்னர் இஸ்ரோ மையத்துக்குச் சென்ற அவர், விஞ்ஞானிகள் அனை வரையும் பாராட்டினார். அவருக்கு லேண்டர் எடுத்தப் புகைப்படங்களும், லேண்டர் விண்கலனின் மாதிரியைத் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வழங்கினார். அவருக்கு பிரதமர் மோடி கைகொடுத்து வாழ்த்து தெரி வித்தார்.  மேலும், நமது நாட்டின் பெருமை யை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே  நிரூபித்துள்ளோம். லேண்டர் தரை யிறங்கிய இடம் இனி ‘சிவசக்தி பாயிண்ட்’ எனவும், 2019 ஆம் ஆண்டு  நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு ‘திரங்கா பாயிண்ட்’ என்றும் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்த பிரதமர், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய  விண்வெளி தினமாகக் கொண்டா டப்படும்” என்றும் அறிவித்தார்.