#தமிழ்நாடு
சென்னை,ஜன. 5- “தமிழ்நாடு என சொல்லு வதை விட “தமிழகம்” என்று சொல்வதே சரியாக இருக் கும்” என ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள் ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பெருமை, பாஜக - ஆளுநர் கூட்டணி யின் அடாவடி ஆகியவற்றை குறிப்பிட்டு “#தமிழ்நாடு” என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் டுவிட்டர் பக்கத் தில் டிரெண்ட் செய்து வரு கின்றனர். இந்த ஹேஸ்டேக் தேசிய அளவில் முதலிடத் தை பிடித்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் சர்ச்சை பேச்சு: சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சர்ச்சையாக பேசி வருகிறார். மாநிலத்திற்கு எதிராகவும் பாஜக மாநிலத் தலைவரைப் போலவும் ஆளுநர் பேசிவருவதாக பல்வேறு அரசி யல் கட்சியினர் கண்டித்துள்ளனர். ஆனால் இந்த சர்ச்சை பேச்சின் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும். தேசத்தின் ஒரு அங்கமாக இருப்பதை தமி ழர்கள் உணரவில்லை என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்க ளுக்கு எதிராகப் பேசியுள்ளார்.இதற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்துள்ளன.ஆளுநரின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தனது டிவிட்டர் வலைதளத்தில், “தியாகி சங்கர லிங்கனார், அறிஞர் அண்ணா, தோழர் பூபேஷ்குப்தா என்று எங்களின் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக்கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றா லும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் மாநாடு: மோடி பங்கேற்கிறார்!
ஒன்றிய அரசு - மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்துகிறோம் என்ற பெயரில், தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டை ஒன்றிய பாஜக அரசு நடத்தி வரு கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் பஞ்சாப்பில் முதல் மாநாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டா வது மாநாடு தில்லியில் ஜனவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு அதிகாரிகள், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களின் அதிகாரி கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
உர்பி ஜாவேத்தை விமர்சித்து பாஜக பெண் தலைவர் வீடியோ!
பேஷனான ஆடைகள் அணிவதற்காக, இந்தி பிக்பாஸ் பிரபலம் உர்பி ஜாவேத்தை விமர்சனம் செய்து மகாராஷ்டிரா பாஜக-வின் மகளிர் பிரிவு தலைவர் சித்ரா வாக் வீடியோ வெளி யிட்டுள்ளார். அதில், “சில கொடூரமான செயல்களை சோதனைகளை சந்தித்த ஒரு 9 வயது சிறுமி யின் தாய் என்னை சந்தித்தார். உர்பி ஜாவேத்துக்கு எதிராக குரல் எழுப்பும்படி அந்த தாய் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். இது சத்ரபதி சிவாஜி மகாராஜின் நிலம், அந்த வகையில், உர்பி ஜாவேத் நிர்வாணம் காட்டுவதை மகாராஷ்டிராவின் கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. உர்பி ஜாவேத்துக்கு எதிராக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
வருமானம் இரட்டிப்பு: மோடி வாக்குறுதி என்ன ஆனது?
“விவசாயிகள் வருமானம், 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்கு ஆக்கப்படும் என்று பிர தமர் மோடி 2016-ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்தார். ஆனால் விவசாயிகளின் வரு மானம் குறைந்துதான் உள்ளது. இதற்கு காரணம், ஒன்றிய அரசின் கொள்கைகள்தான். அதே நேரம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தபோது, விவசாயிகளின் வரு மானம் ஆண்டுதோறும் 7.5 சதவிகிதம் அதிகரித்து வந்தது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பேசியுள்ளார்.
ஜே.பி. நட்டா தர்காவுக்கு சென்றது இதயப்பூர்வ பயணமா?
2024 மக்களவைத் தேர்தல் தயாரிப்புப் பணிகளுக்காக மகாராஷ்டிராவுக்கு சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, சந்திராபூரில் உள்ள காளி கோவிலுக்கு சென்றதுடன், அருகில் உள்ள சையத் பெஹாபத்துல்லா ஷா தர்காவிற்கும் சென்று சகர் வழங்கினார். இந்நிலையில் நட்டா தர்ஹாவுக்கு சென்றது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பி யுள்ளது. “இறுதியாக, இந்தியா பல மதங்கள் வாழும் நாடு என்பதை பாஜக உணர்ந்துள்ளது. தேசத்தை ஒரு மதத்திற்குள் அடைத்து விட முடியாது. கேள்வி என்னவென்றால், பாஜக அதை இதயத்தில் இருந்து (தர்காவிற்கு வருகை) செய்கிறதா?” என்பதுதான் என காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் பள்ளி ஆசிரியர்களுக்கும் விசாரணை இருக்குமா?
“அசாமில் உள்ள மதரசாக்களில் பாடம் நடத்த வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஆசிரி யர்கள், அவ்வப்போது உள்ளூர் காவல் நிலையங்களுக்கு வருமாறு அழைக்கப்பட லாம்’’ என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியிருந்தார். இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். ‘’அசாம் ஒன்றும் வெளிநாடு அல்ல. எனவே, இந்தியர்கள் அசாம் வருவதற்கு அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை. இந்திய குடிமக்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்வதற்கும், தங்குவதற்குமான அடிப்படை உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்தும் பள்ளிகளுக்கும் இதே போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பீர்களா? அசாமில் இருந்து வருபவர்களுக்கு பிற மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன ஆகும்?’’ என ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.
சந்தை மதிப்பீட்டில் நிலத்திற்கான இழப்பீடு விவசாயிகள் சங்க சிறப்பு மாநிலக் குழு வலியுறுத்தல்
பள்ளிபாளையம், ஜன. 5- நிலத்திற்கான இழப்பீட்டை 2013 நிலம் கையகப் படுத்தும் சட்டம் அடிப்படையில் சந்தை மதிப்பீட்டின் அடிப் படையில் வழங்கி விட வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பி.கே.பழனி யப்பன் பாவாயம்மாள் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடை பெற்றது. இதில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன் பங்கேற்றார். இதில், மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநில குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை அடிப்படையில், விவசாய உற்பத்தி பொருட்க ளுக்கு குறைந்தபட்ச விலையாக உற்பத்தி செலவுடன், 50 சதவிகிதம் சேர்த்து வழங்கிட வேண்டும், உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டம், கெயில் எரிவாயு குழாய் திட்டம், ஐடிபிஎல் பெட்ரோலியம் பைப்லைன் போன்ற திட்டங்களை, விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் சாலையோரம் கொண்டு சென்று, திட்டத்தை அமலாக்கிட வேண்டும். ஏற்கனவே திட்டங்கள் அமலாக்கப்பட்ட இடங்களில், நிலத்திற்கான இழப்பீட்டை 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டம் அடிப் படையில் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கி விட வேண்டும். எருமைப்பால் லிட்டருக்கு ரூ52ம், பசும்பால் ரூ42 ரூபாயும், கொள்முதல் விலை நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லிப்ட் பழுதால் சிக்கித்தவித்த அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர்,ஜன.5- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்திலுள்ள கூட்டரங் கில், மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளு படி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சி கள் வியாழனன்று (ஜன.5) நடை பெற்றது. இதில் போக்குவரத்துறை அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் உடனிருந்தார். இரு வரும் மேல் தளத்திற்கு செல்வதற்காக அங்கு இருந்த லிப்டில் ஏறி சென்ற னர். அப்போது திடீரென லிப்டின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து ஆபத்து மற்றும் அவசர கால கதவின் வழியே, சிக்கிக் கொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 30 நிமிடங்களாக நடந்த போராட் டத்திற்கு பின்புதான் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரி கள் உள்பட அனைவரும் மீட்கப்பட்டனர்.
தரமற்ற கட்டுமானம்: 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம்,ஜன.5- காஞ்சிபுரம் மாவட்டம், வாலா ஜபாத் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி யடைந்தார். இந்த நிலையில், ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இரு ளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாலா ஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவத னம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும் ஆட்சியர் உத்தரவு பிறப்பித் துள்ளார்.
வழக்கு தள்ளுபடி
சென்னை,ஜன.5- காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் 18 அன்று பதவி ஏற்றுகொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு பிரச்சனைக்குரிய நபராகவே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பி யுள்ள கோப்புகளுக்கு உரிய கையெ ழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருகிறார். எந்தவொரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்பு களை நிலுவையில் வைத்து பொது மக்களின் நலனுக்கு எதிராக செயல்படு கிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசார ணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி கள் வியாழனன்று (ஜன.5) உத்தர விட்டனர்.
செங்கை புத்தகத் திருவிழாவிற்கு 25ஆயிரம் பேர் வருகை
செங்கல்பட்டு,ஜன.5- செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வா கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதி யார் மன்றம் இணைந்து செங்கை புத்தக திருவிழாவை கடந்த மாதம் 28 முதல் ஜனவரி 4 வரை நடத்தியது. மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகக் கண்காட்சியை சுற்றிப்பார்த்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 50 அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால், ஏராளமானோர் இக்கண்காட்சியினை கண்டு களித்தனர். நிறைவு விழாவில் ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் பேசுகை யில், “செங்கை புத்தக திருவிழா 2022, மாநிலத்தில் எங்கும் இல்லாத வகையில் 15,500 மாணவர்கள் மற்றும் 10,100 பொது மக்கள் என மொத்தம் 25,600 வருகை தந்துள்ளனர் என்றார். இந்த புத்தக திருவிழாவில் பங்கு பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.100 மதிப்புள்ள டோக்கன் வழங்கப்பட்டு அதைக் கொண்டு மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்த கத்தை வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களும் பயன்பெற்றனர். இதற்காக ரூ. 10 லட்சம் செலவிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.
எழும்பூர் அருங்காட்சியகம் புதுப்பிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
சென்னை,ஜன.5- சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சி யகம் புதுப்பிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூர் அருங்காட்சி யகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப் பிக்கப்படவுள்ளது. மேலும் பாதுகாப்பு உபகரணங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எழும்பூரில் அருங்காட்சியகத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி அருங்காட்சியகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதற்காக விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் ரூ.62 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு சீரமைப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டதாக அருங்காட்சியக இயக்குநர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் அருங்காட்சியகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.