states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பி.டி. உஷாவுக்கு எதிர்ப்பு

புதுதில்லி, ஏப். 28- நீதி கேட்டு போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளை ஒலிம்பிக் சங்க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி.உஷா கைவிட்டார். “தெருவில் போராட்டம் நடத்துவது ஒழுங்கு  மீறலாகும். அது நாட்டின் நன்மதிப்புக்கு ஊறு விளைவித்துள்ளது. முன்னதாகவே ஒலிம்பிக் சங்கத்தை அணுகியிருக்கலாம். ‘விளையாட்டு நட்சத்திரங்கள் அவ்வாறு செய்யவில்லை’ என பி.டி.உஷா கூறியுள்ளார். சாக் ஷி மாலிக் கண்டனம் இந்நிலையில், “ஒலிம்பிக் சங்கத்திடமிருந்து இதை  எதிர்பார்க்கவில்லை” என ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தாரகையான சாக் ஷி மாலிக் கூறினார். மீண்டும் மீண்டும் புகார் தெரிவித்தும் காவல்துறைக்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கவோ ஒலிம்பிக் சங்கம் முன்வரவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டதன்பேரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு போராடக்கூட அனுமதி இல்லையா எனவும் மாலிக் கேள்வி எழுப்பினார்.

இடுவாய் ஊராட்சியில் ரூ.97 ஆயிரத்தில் தெருவிளக்குகள்

திருப்பூர், ஏப். 28 – திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் உள்ள தாந் தோணி அம்மன் நகரில் கூடுதல் மின்விளக்குகளும், சிவசக்தி  நகரில் புதிய தெருவிளக்குகளும் ரூபாய் 97 ஆயிரத்து 161  மதிப்பீட்டில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மூணாறு விபத்து: பலி 6 ஆக உயர்வு

தேனி, ஏப்.28- கேரள மாநிலம் மூணாறுக்கு திருமண விழாவில் பங்  கேற்பதற்காக  திருநெல்வேலி கே.டி.சி நகர், சண்முகா புரத்தை சேர்ந்த 21 பேர் கடந்த 22 ஆம் தேதி வேனில் வந்த னர்.  மூணாறு அருகே தொண்டிமலை என்ற இடத்தில்  செல்லும் போது, அங்குள்ள ஒரு வளைவில் கட்டுப் பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் வேனில் பயணித்த பெருமாள் (59),  வள்ளியம்மாள் (70) சுசீந்திரன் (8) சுதா(20) ஆகிய 4 பேர்  உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகி  (55) என்ற பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி   இறந்தார். இந்த நிலையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயதான சுசீலேந்திரன் என்ற சிறுவன் நேற்று சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.  இதன்மூலம் மூணாறு விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

பாலியல் வக்கிரப் பேர்வழியை கைது செய்ய வலியுறுத்தல்

நாகர்கோவில், ஏப்.28- கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவில் பார்வதி புரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (22), இவர் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டார். குறுகிய காலத்தில் வெளியே வந்தவர் மீண்டும் தனது பாலியல் வக்கிரத்தை யும் இதர சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ‘ரோமியோ வாக’ வலம் வந்தவர் ரவுடி யாகவும் தனது ஆதிக் கத்தை தொடர்ந்தார். இந்நிலையில் அண்மை யில் பள்ளி மாணவி ஒருவரை  கடத்திச் சென்று 2 நாட்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் வல்லு றவு கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற் றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் சிறுமியிடம் சிறார் பாது காப்பு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனா லும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்தும், பெண்கள் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வலி யுறுத்தியும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்க வலி யுறுத்தியும் பார்வதிபுரம் சந்திப்பில் சிபிஎம் இராஜாக் கமங்கலம் ஒன்றியக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏப். 28 வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

கண்ணகி கோவில் சித்திரை திருவிழா  தமிழ்நாடு -கேரள அதிகாரிகள் ஆய்வு

தேனி, ஏப்.28- குமுளி அருகே கண்ணகி கோவிலில் வருகிற மே 5 ஆம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தேனி, இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் . தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா சித்ரா பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் கேரளாவின் கெடுபிடியால் ஒருநாள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5ந் தேதி நடைபெற உள்ளது.  விழா நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17ந் தேதி தேக்கடியில் நடைபெற்றது.  இதில் தேனி மாவட்ட ஆட்சியர்  ஷஜீவனா, இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.   இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, உத்தமபாளையம் வரு வாய் கோட்டாட்சியர் பால்பாண்டி யன், வட்டாட்சியர் சந்திரசேகர், கேரள அரசு சார்பில் பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் பாட்டீல் சுயோக் சுபாஷ் ராவ், இடுக்கி மாவட்ட துணை கலெக்டர் அருண்நாயர், பீர்மேடு டி.எஸ்.பி. குரியகோஷ் மற்றும் வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். எனவே கோவில் வளாகத்தில் சீரமைப்பு பணி, குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம் அமையும் இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

பழங்கள், குடிநீரை ஆய்வு செய்ய  அரசு அறிவுறுத்தல் 

சென்னை, ஏப்.28- கோடை காலத்தை முன்னிட்டு பழங்கள் மற்றும் குடிநீரை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். அனைத்து மாவட்ட சுகாதார  அலுவலர்கள் மற்றும் உணவு  பாதுகாப்புத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வுக் கூட்டம் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. பிறகு, செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறு கையில்,“கோடை காலம் என்பதால்  வியாபாரிகள் மாம்பழம், வாழை, தர்பூசணி போன்ற பழங்களை பழுக்க வைப்பதற்கு ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது”என்றார். அதே போல் குடிநீர் மாதிரிகள் எடுத்து தரமுள்ள வகையில் குடிநீர் தயாரிக்கப்படுகிறதா தரமான குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்கிறார்களா என்பதை கண்காணிக்க அறிவுறுத்தி யிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை  விதித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு  ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே  மாவட்ட அலுவலர்கள் தங்களுடைய மாவட்டத்தில் அனைத்து கடைகளை யும் ஆய்வு செய்து இத்தகைய போதை  வஸ்துக்கள் விற்பனை செய்யாமல் இருக்க சட்டப்பூர்வ நடவடிக்கை அறி வுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். 

மாணவியர் இடைநிற்றலை தடுக்க ஊக்கத் தொகை 

சென்னை, ஏப்.28- தமிழ்நாட்டில், அரசு உதவி  பெறும் பள்ளிகளில் படிக்கும், ஆதிதிராவிட மாணவியர் இடைநிற்றல்  இன்றி, தன் படிப்பை தொடர்வதை ஊக்குவிக்க, பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், 3 முதல் 5 ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு  ஆண்டுக்கு ரூ. 500,  ஆறாம் வகுப்பு மாணவிக்கு ரூ. 1,000, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு ரூ. 1,500 வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், 4.52 லட்சம் மாணவிகளுக்கு ரூ. 43.44 கோடி  ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ. 45.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு பாடப் புத்தகம், குறிப்பேடுகள் வழங்க ரூ.1.50 கோடியும் இலவச சைக்கிள்  வழங்க ரூ. 103 கோடியும் ஒதுக்கப்பட் டுள்ளது.

ஐஐடியில் நவீன ஆராய்ச்சி ஆய்வகம்

சென்னை, ஏப்.28- சென்னை ஐஐடியில் கட்டிடக் கலை, டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் அமைப்பதற்காக அங்கு படித்த முன்னாள் மாணவர் பிரதாப்சுப்பிரமணியம் ரூ.6.76 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதன் திறப்புவிழா கிண்டியிலுள்ள வளாகத் தில் நடைபெற்றது. இந்த ஆய்வகத்தை ஒன்றிய  மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி  கோர விபத்தில்  3 இளைஞர்கள் பலி

கிருஷ்ணகிரி,ஏப்.28- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி திருத்தனி முருகன் என்ற தனியார் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நாட்டார் கொட்டாய் என்ற இடத்தில் வந்த போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பர்கூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (24), பிரித்திவி ராஜ் (25), ஹேமநாத்  (26) ஆகிய மூவரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர்  காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து காரணமாக பர்கூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வருமானவரி சோதனைகளால் அச்சுறுத்த முடியாது: உதயநிதி 

சென்னை,ஏப்.28- நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று (ஏப்.28) நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வருமானவரி சோதனைகள் எப்போதும் நடப்பது தான். ஒவ்வொரு வருடமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல் தான் இப்போதும் நடக்கிறது. இந்த மாதிரி சோதனைகளால் எங்களை அச்சுறுத்த முடியாது. இதுவரை நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்கு போடப்பட்டு உள்ளதா? யாரையாவது கைது செய்துள்ளார்களா? நட வடிக்கை எடுத்துள்ளார்களா? யார் மீதும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லையே. என் மீது ஏதாவது எப்.ஐ.ஆர்.போட்டு இருக்கிறார்களா? எதுவும் இல்லையே. அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு  பாஜகத் தலைவர் அண்ணாமலை வகுப்பு எடுப்பது போல் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் கர்நாடகா வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை பாதியில் நிறுத்தியதைப் பற்றி கேளுங்கள். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பற்றி  கேட்கிறீர்கள். அவர் பேசியதாகவே பல ஆடியோக்கள் வெளி  வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பிஎஸ் - 2: இணையதளங்களில்  வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சென்னை,ஏப்.28- பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் பிரம்மாண்டமாக உருவாக்கிய படம்தான் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா தயாரிப்பில் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிர காஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி என பட்டாளமே நடித்திருக்கிறது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை  படைத்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முதல் பாகத்தை  தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்க ளின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தி யில் ஏப்.28 வெள்ளியன்று வெளியாகி யுள்ளது. இந்நிலையில், பொன்னியின்  செல்வன்-2 திரைப்படத்தை சட்டவிரோ தமாக இணையதளங்களில் வெளி யிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3,888 மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க இணைய தள சேவை நிறுவனங்கள் தடுக்கக் கோரி லைகா பட தயாரிப்பு நிறுவனம்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தி ருந்த நிலையில் வழக்கில் நீதிபதி எஸ்.சௌந்தர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு சிறப்பு பேருந்துகள்:  50 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னை,ஏப்.28- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட் டுள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி  தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர். அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்க ளும் தேர்வு முடிவுக்காக காத்து  இருக்கின்ற நிலையில் வெளியூர்க ளுக்கு பயணத்தை தொடங்கியுள்ள னர். கோடை விடுமுறை ஒரு புறமும்  அரசு ஊழியர்களுக்கு மே தினத்தை யொட்டி சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை  3 நாட்கள்  தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் வெளியூர் பயணம் செய்ய  மக்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டதால் ஆம்னி பேருந்துகளில் கொள்ளைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் ரூ.2 ஆயிரம்,  ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்ட ணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதனால் அரசு பேருந்துகளை நாடி பலரும் வருகிறார்கள். அரசு விரைவு பேருந்துகள் மற்றும்  பிற போக்குவரத்து அரசு பேருந்துகள்  இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன. ஏப்.28 முதல் மே 1 ஆம் தேதி வரை  50 ஆயிரம் பேர் முன்பதிவு  செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேர்  வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். வெளி யூர்களில் இருந்து சென்னை திரும்ப வும் ஆயிரக்கணக்கானவர்கள் முன் பதிவு செய்து பயணத்தை மேற் கொள்கின்றனர்.

உலகச் செய்திகள்

வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்குச் சொந்தமான பெரிய படகின் மீது மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கப்பல் ஒன்றை ஈரானின் ராணுவம் மடக்கிப் பிடித்தது. மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த அந்தக் கப்பல், படகின் மீது மோதியதால் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். மோதிய பிறகும், கப்பலை நிறுத்தாமல் தொடர்ந்து பயணிக்க முயற்சித்தார்கள். இதனால் ஈரான் ராணுவம் தலையிட்டது.

கிறிஸ்தவக் கத்தோலிக்க தேவாலயங்களின் பிரதிநிதிகள் கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் தியாஸ்-கானெல்லைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். நாட்டின் சமூகப் பொருளாதாரச் சூழல் மற்றும் கியூப சமூகத்தின் மாண்புகளைப் பலப்படுத்துவது ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன. பரஸ்பர மரியாதையுடனும். மதத்திற்கு புரட்சி தரும் மரியாதையுடனும், இரு தரப்பும் இதில் பங்கேற்றன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 அன்று நடைபெறவிருக்கும் பராகுவே பொதுத் தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக இருக்கும் இடதுசாரித் தலைவர் எப்ரெய்ன் அலிக்ரே வெற்றி பெறுவார் என்று வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசிக் கணிப்பில் தெரியவந்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பலரும் பதில் சொல்லத் தயங்கினாலும், 34.3 விழுக்காட்டினர் எய்ரெய்ன் அலிக்ரேவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்கள்.