மதுரை, ஜன. 5- மதுரை நகர் பகுதிகளில் சாலை யின் மையப்பகுதி மற்றும் சாலை யோரங்களில் அதிகளவில் மண் குவிந்துள்ளன. இதனை அகற்ற நவீன இயந்தி ரங்கள் வந்தாலும் இன்னும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் பெண் பணி யாளர்களைக் கொண்டு அப்புறப் படுத்துகின்றனர். இந்த பணி யாளர்களுக்கு போதிய உபகரணகள் கூட வழங்கப்படவில்லை. அகற்றி குவிக்கப்படும் மண்ணை உடனடியாக அள்ளக்கூடிய ஏற்பாடு இல்லை. இதனால் அந்த மண் மீண்டும் சாலை யோரத்தில் குவிகிறது. மதுரையில் பைபாஸ் ரோடு மற்றும் முக்கிய பாலங்கள், மாநக ராட்சி பகுதிகள் என பல இடங்களி லும் மணல் குவியல் தொடர்ந்து ஏற்படு கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மதுரை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சாலை ஓரங்களில் குவியும் மண்ணை அப்புறப்படுத்துவதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.மனிதர் களை ஈடுபடுத்துவதால் அவர்களுக்கு சுவாசக்கோளாறு போன்ற பிரச்ச னைகள் ஏற்படும்.எனவே மண் அள்ளு வதற்கு உரிய உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி யுள்ளனர்.