அக்டோபர் 15 அன்று உச்ச நீதிமன்றத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலையில், கண்கட்டு மற்றும் வாள் நீக்கப்பட்டுள்ளது. இது நீதியின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து பின்வாங்குவதை குறிக்கிறது. நீதி தேவதையின் சின்னம் கால னித்துவ திணிப்பு அல்ல. இது பண்டைய எகிப்திய தேவதை மாத் மற்றும் கிரேக்க தேவதை தெமிஸ் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. பின்னர் ரோமானியர்கள் ஜஸ்டிடியா என அழைத்தனர். நீதி தேவதையின் கண்கட்டு நீக்கப் பட்டது குறித்து கவலை எழுந்துள் ளது. கண்கட்டு என்பது நீதி கண்மூடித் தனமானது என்பதை குறிக்கவில்லை. மாறாக, நீதி வழங்கும்போது சமூக அந்தஸ்து, செல்வம் அல்லது அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பார்க்கக் கூடாது; கணக்கில் எடுக்கக்கூடாது என்பதை குறிக்கிறது. இந்திய அரசி யலமைப்பின் சரத்து 14-இல் உள்ளபடி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே இது குறிக்கிறது. வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு வைக்கப்பட்டுள்ளதும் கவலை அளிக்கிறது. வாள் என்பது தண்ட னையை மட்டுமல்ல, சட்டத்தின் அதிகாரத் தையும் குறிக்கிறது. அரசியலமைப்பு உரிமைகளை வழங்கினாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை குறிக்கவில்லை. காலனித்துவத்தை எதிர்ப்பது என்பது உலகளாவிய நீதிக் கொள்கைகளை நிராகரிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, தீங்கான காலனித்துவ திணிப்பு களை மட்டும் நிராகரித்து, நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் பொது வான கொள்கைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சின்னங்கள் முக்கியம். அவை பொது மக்களின் புரிதலை வடிவமைக்கின்றன. பாரம்பரிய நீதி தேவதை காலனித்துவ அடக்குமுறையை அல்ல, சட்டத்தின் கீழ் சம உரிமை, பாரபட்சமற்ற தீர்ப்பு, நீதியை நிலைநாட்டும் அதிகாரம் ஆகிய உயரிய இலட்சியங்களையே குறிக்கிறது. ஸ்க்ரால் இணைய ஏட்டில் கரன்வீர் சிங், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தெற்காசிய சட்டவல்லுநர்.