புதுதில்லி, செப்.26- அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் ரகசியமாக கொடுத்த பணத்தின் பலத்தில்தான் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி அமைத்தார் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். தேசிய அளவில் மோடி அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுதில்லி ஜந்தர்மந்தரில் கட்சியின் தில்லி மாநிலக் குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தை பிருந்தா காரத் ஞாயிறன்று (செப்.25) தொடங்கி வைத்தார். பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், தில்லி, காசியாபாத், லோனி மற்றும் நொய்டா பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டனர். அப்போது பேசிய பிருந்தா காரத், பணவீக்க உயர்வுக்கு மோடி அரசின் கொள்கையே காரணம் என்றார். ஒருபுறம் அதானி போன்ற முதலாளிகள் உல கின் இரண்டாவது பணக்காரர்கள். மறுபுறம், தினக்கூலி கள் மற்றும் இளைஞர்களின் தற்கொலைகள் அதி கரித்து வருவதாகவும் பிருந்தா காரத் சுட்டிக்காட்டி னார். ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் வகுப்புவாத தாக்கு தல்களை அதிகரித்து வருகின்றன. ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நின்று அவற்றை பாதுகாக்க இடதுசாரிகள் வலுவடைவது அவசியம் என்றும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி தலைமை வகித்தார்.