states

நொச்சிக்குப்பம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்!

சென்னை, ஏப்.19- நொச்சிக்குப்பம் மீனவர்க ளின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.  இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (ஏப்.19) எதிர்க் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டுவரப் பட்டது. நாகைமாலி சிபிஎம்: சென்னை கடற்கரை அருகாமை யிலுள்ள நொச்சிக்குப்பம் மீனவ  கிராம மக்கள் கட்டுமரத்தில் சென்று மீன்களை பிடித்து வந்து, அதில் கிடைக்கும் வரு மானத்தின் மூலம் வாழ்க்கை நகர்த்தி வருகிறார்கள். அங்குள்ள லூப் சாலை பகுதியில் மீன்மார்க்கெட் அமைத்து காலகாலமாக விற்பனை செய்து வருகிறார் கள். இப்போது, போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ளது என்று ஆயிரக்கணக் கான மீனவ மக்களின் வாழ்வை சீர்குலைப்பது சரியல்ல. எனவே, அந்தப் பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் (அதிமுக), வேலு (திமுக),  ஜி.கே.மணி  (பாமக), தமிழக வாழ்வுரி மைக் கட்சித் தலைவர் வேல் முருகன், மனிதநேய மக்கள்  கட்சித் தலைவர் ஜவாஹி ருல்லா ஆகியோரும் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நொச்சி குப்பம் மீனவர்களின் வாழ் வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்  என முதலமைச்சர் வலி யுறுத்தியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் மிக தீவிரமான  நடவடிக்கையால் மூத்த வழக்கறிஞர்களை இந்த வழக்கில் வழக்காட செய்து  மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண் டும். அவர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன் வைத்துள்ளோம். மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிழக்கி லும் மேற்கிலும் கடை வைத்து  கொள்ள மூத்த வழக்கறிஞர் கள் வாதத்தை பதிவு செய்திருக் கிறார்கள். எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தங்கு தடையின்றி வியாபாரம் செய்ய  ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  கேட்டுக் கொண்டனர். போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இருக்காது எனவும் வாதத்தை முன் வைத் துள்ளனர். சென்னை மாநக ராட்சியின் ஆணையரும் உயர் நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவாதத்தையும் எழுதி தந்துள்ளார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரு  பக்கமும் மீனவர்கள் வியாபா ரம் செய்வதை உறுதிப்படுத்து வோம் என மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வழக்கு ஜூலை 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.எனவே இந்த பிரச்சனை  முடிவுக்கு வந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.