மணிப்பூர் : ஒன்றிய அரசின் அமைதி குழுவிற்கு குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நிய மித்துள்ள 51 பேர் கொண்ட அமைதிக் குழுவுக்கு குக்கி இன மக்கள் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து குக்கி இன மக்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நியமித்துள்ள குழு வில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மாநில அரசிடம் விட்டுவிடக் கூடாது. மேலும் குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கையி லும் கடும் பாகுபாடு உள்ளது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு நியமித்த குழுவில் மெய்டே சமூகத்தைச் சேர்ந்த 25 பேரும், குக்கி குழுக்களைச் சேர்ந்த 11 பேரும், நாகா சமூகத்தைச் சேர்ந்த 10 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை : கனடா அரசு
கனடாவில் தற்போது 416 இடங்களில் காட்டுத் தீ பரவல் உள்ளது. இதில் 203 இடங்களில் காட்டுத் தீ கட்டுப்படுத்து வது இயலாத காரியம் ஆகும். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வரு கின்றோம். கோடை முழுவதும் காட்டுத் தீ நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது என அந்நாட்டு அமைச்சர் பிராங்கோயிஸ் பொன் னார்டெல் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிரட்டும் “பிபோர்ஜாய்” புயல் : 144 தடை உத்தரவு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபோர்ஜாய் புயலாக உரு வெடுத்துள்ளது. இது மேலும் அதிதீவிர புயலாக வலுப் பெற்று ஜூன் 15 அன்று நண்பகல் குஜராத்தின் மான்ட்வி - பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஷ்டிரா, கட்ச் பகுதி யில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலை யில், குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளு க்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்குக்காக அரசு போராடுகிறது
சென்னை, ஜூன் 12- தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்க மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி யுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியின் 187வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகை யில்,“மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தி னால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக் கப்படுவர். பொது கலந்தாய்வை தமிழ் நாடு அரசு கடுமையாக எதிர்க்கும்” என்றார். அதிகளவு மருத்துவ கல்வி இடங் களை வைத்துள்ள தமிழகத்தில், தமி ழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர்கள் பயன்பெறுவர். இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழகம் தான். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது என்றும் அவர் கூறினார்.
அறுவடைக்கு தயாரான மாங்காய்களில் பூஞ்சை தாக்குதல்
கிருஷ்ணகிரி, ஜூன் 12- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறு வடைக்கு தயாரான மாங்காய்களில் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால், விவ சாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்து ள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டிற்கு 1,32,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு சுவை மிகுந்த அல்போன்ஸா, தோதா புரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற மாம்பழங் கள் அதிக அளவில் விளைவிக்கப் படுகிறது. மா விவசாயத்தை வாழ்வா தாரமாக கொண்டு லட்சக் கணக்கான விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், நிகழாண்டில் மாமரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியதில் இருந்தே பூச்சி தாக்கு தல், வெயிலின் தாக்கம், சிண்டிகேட் விலை உள்ளிட் டவை யால் விவசாயி களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அறு வடைக்கு தயாரான மாங்காய்களில் பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டுள் ளதால், மகசூலில் 50 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவ சாயிகள் வேதனையுடன் தெரிவித்துள் ளனர்.
தூய்மை காவலர்களுக்கு ஊதியம் உயர்வு
சென்னை, ஜூன் 12- ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக் கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்ற னர். தூய்மை காவலர்களுக்கு வழங்கப் படும் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாதாந்திர மதிப்பூதியம் 3600 ரூபாயி லிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட் டுள்ளது.
இன்றும் வெப்பம் அதிகரிக்கும்
சென்னை, ஜூன் 12- மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திங்களன்று ஜூன் 12 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னது டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஜூன் 13 முதல் 16 வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் செவ்வாயன்று (ஜூன் 13) அதிக பட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சில இடங்க ளில் 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கட்டுச்சோற்றில் எலி அண்ணாமலை: அதிமுக தாக்கு
சென்னை, ஜூன் 12- கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி போல பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான அண்ணாமலையின் பேச்சு அதிமுக வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியா ளர்களிடம் பேசுகையில், அண்ணாமலைக்கு நாவ டக்கம் இல்லை, இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக் கொள்வார். விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அனைத்தையும் தாங்கிக்கொண்டு நீடிக்க முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவின் தலைவரை விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? அண்ணாமலை கூட்டணி என்ற கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி போல செயல்படுகிறார் என்றும் ஜெயக்குமார் காட்டமாக கூறினார். அதிமுக வுடன் கூட்டணி தொடர்வது அண்ணா மலைக்கு பிடிக்கவில்லை என்பது போல் அவரின் பேச்சு உள்ளது .அண்ணாமலை மீது அமித்ஷா, ஜே.பி. நட்டா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.