states

பட்டாசு மாசு: சென்னை மக்களுக்கு ஒரே நாளில் 31 சிகரெட் புகைத்த பாதிப்பு!

சென்னை, அக். 26- தீபாவளிக்கு வெடித்த பட்டாசு புகையால் சென்னை இப்பொழுது வரை மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் சராசரி யாக காற்றின் தரக் குறியீடு 500 என்ற  அபாய அளவுக்கு மேல் பதிவாகி உள்ளது.   செவ்வாய்க்கிழமை (அக். 25) காலை 8.30 மணி நிலவரப்படி உலகி லேயே அதிகம் காற்று மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தில்லியை பின்னுக்குத் தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. ஒரு நல்ல ஆரோக்கியமான காற்று என்றால் காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50  வரை இருத்தல் வேண்டும்.  பொதுவாக தென் சென்னையின் காற்றின் தரக் குறியீடு 50 முதல் 60  வரை இருக்கும். ஆனால் திங்கட் கிழமை இரவு சென்னையின் காற்றின்  தரம் 786 வரை பதிவாகி உள்ளதாக மாசு  கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இது ஒருவர் 31 சிகரெட் பிடித்ததற்கு சமமாகும். காற்றின் தரம் 300க்கு மேல் சென்றால் அது அபாயகரமான நிலை யாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமை இரவு முதல் ஆலந்தூர், பெருங்குடி, சவுக்கார்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, கிண்டி, மணலி, எண்ணூர், கொடுங்கையூர், தி.நகர்,  பாரிஸ், வண்டலூர், அடையார் உட்பட சென்னையின் பல  பகுதிகளில் காற்றின் தரம் யாரும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அபாயகரமாக சென்றுள்ளது. அக்டோபர் 24 காலை 6 மணி முதல் அக்டோபர் 25 காலை 6 மணி வரை காற்று தரக்குறியீடு அதிகபட்சமாக சவுக்கார்பேட்டையில் 786 ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 563 ஆகவும், வளசரவாக்கத்தில் 545 ஆகவும் பதிவாகி உள்ளது. இரவு 11 மணி முதல் 12 மணி வரை அளவில் சென்னையின் நுண்துகள் அளவுகள் 950 யுஜி/எம்3 ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகும்.

தீபாவளி அன்று இரவு 8 மணிக்கு மேல்தான் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்தது. இரவு 8 மணிக்கு மேல் சென்னையின் நான்கு காற்று தர  கண்காணிப்பு நிலையங்கள் இயங்க வில்லை என்பதும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மணலி  கண்காணிப்பு நிலையம் மட்டுமே  செயல்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. வழக்கத்தை விட தீபாவளி யன்று சென்னையின் காற்றின் தரம் 10 முதல் 15 மடங்கு அதிகமாக பதிவாகி  உள்ளது. வாகனத்திலிருந்து வெளிவரும் புகையில் நச்சு வாயுக்களான கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன், மற்றும் நுண்து கள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு  வெடிக்கும் பொழுது நுண் துகள்களு டன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன  உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், னைட்ரிக் ஆக்சைடு, நைட்ர ஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், குளோரைடு, ஓசோன், பெர்க்ளோ ரைடு,  அலுமினியம், தாமிரம் போன்ற  உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன. பட்டாசு புகை காரணமாக எத்தனை  கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர், எத்தனை பேர்  காற்று மாசின் காரணமாக உயிரிழந் தார்கள் என்கிற பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று பூவுலகின்  நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கி றோம்.

ஒரு அறிவார்ந்த சமூகம் இப்படி பண்டிகை என்ற பெயரில் பட்டாசு வெடித்து சுவாசிக்கும் காற்றை விசமாக்குவது ஏற்புடையதல்ல. பட்டாசு ஒரு சூழல் பிரச்சனை மட்டு மல்ல. சமூகநீதிப் பிரச்சனையும்கூட. பட்டாசுகள் ஏராளமான அளவில் கையாள முடியாத நச்சுத் திடக்கழிவு களை உருவாக்குகின்றன. கேளிக்கை  விரும்பிகள் பட்டாசுகளை தெருக்களி லும் குடியிருப்பு வளாகங்களிலும் வெடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக் குத் திரும்பிவிட, இந்த குப்பைகள் அடுத்த நாளில் யாரால் அகற்றப்படு கின்றன என்ற கேள்வி எழுகிறது. பட்டாசுகள் வெடிப்பதற்கு முன்பு  இருப்பதைவிட அவற்றின் எச்சங்க ளில் முழுமையாக எரியாத நச்சு  வெடிமருந்துத் துகள்கள் நிரம்பி யிருக்கும். இந்த நச்சுக்குப்பையை எந்த பாதுகாப்பு வழிமுறைகளுமின்றி நகரின் விளிம்புநிலை மனிதர்களான தூய்மைத் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்துகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சென்னையில் 211 மெட்ரிக் டன் குப்பைகள் அவ்வாறு அகற்றப்பட்டிருக்கின்றன. உண்மையான அளவு இதைவிடப் பலமடங்கு இருக்கும் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும். இந்த குப்பைகளை அவர்கள் மட்டும் சேகரிக்கும் நிலைக்கு வலிந்து  தள்ளப்படுவது ஒரு சமூக அவல மும் அநீதியுமாகும். சாதாரண மட்கும்  மட்காக கழிவுகளையே கையாள்வ தற்கான உட்கட்டமைப்புகள் இன்னும் சரியாக உருவாக்கப்படாத நிலையில் இந்த நச்சுக் கழிவுகள் இறுதியாக என்ன செய்யப்படுகின்றன என்ப தையும் அந்தத் தொழிலாளர்களுக்கு இவை என்ன பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன என்பதையும் எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. சூழலைக் கெடுக்கும் மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தினை தமிழ்ச் சமூகம் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். தில்லி அரசு பட்டாசுக்கு முழுமையான தடை விதித்ததை போன்று தமிழ்நாடு அரசாங்கமும் பட்டாசு தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.