மதுரை, அக். 23 - எவ்வளவு மழை பெய்தாலும், மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல, வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை. இத னால், மருத்துவமனையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லை. வார்டுகளும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிர மணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “தற்போது மழை பெய்த நிலை யில், அது தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் தேங்கி உள்ளது” என தெரிவிக்க ப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதற்கான முறையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர் பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர கத்தின் இயக்குநர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசார ணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.