மதுரை, அக்.13- இளைஞர்கள் குறிப்பாக மாண வர்கள் எதிர்காலத்தை ஆன்லைன் விளையாட்டுகளில் பணயம் வைக் கின்றனர். ஒன்றிய அரசு சில விளை யாட்டுக்களை தடை செய்தும் அவை எப்படி கிடைக்கிறது என கேள்வி யெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது தொடர்பாக ஒன்றிய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜே.சத்தியநாராயண பிர சாத் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழனன்று கூறியதாவது: மாணவர்கள் ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு அடிமையாகி வரு கின்றனர். இதனால் வீட்டில் பிரச்ச னைகள் ஏற்படுகிறது. பலர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். இளைஞர்கள் ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு அடிமையாகி கடு மையான உடல்நலப் பிரச்சனை களுக்கு ஆளாகின்றனர். எனவே ஆன்லைன் விளையாட்டுகளை குறிப்பாக வெளிப்படையான வன் முறை விளையாட்டுகளை தடுக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வலி யுறுத்தியுள்ளது.
2020- ஆம் ஆண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக சில சீன ஆன் லைன் சேவைகள், விளையாட்டு களை ஒன்றிய அரசு தடை செய்துள் ளது. ஆனால் ஆன்லைனில் விளை யாட்டுகள் எவ்வாறு கிடைக்கின்றன என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பி னர். மேலும், பள்ளி, கல்லூரி செல் லும் மாணவர்கள் ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு அடிமையாகி வரு வதால் வீட்டில் உடன்பிறந்தவர்கள் மற்றும் பெற்றோருடன் தகராறு ஏற் படுகிறது. சிலர் இதுபோன்ற விளை யாட்டுகளுக்கு அடிமையாகி தற் கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டால் ஏற் படும் ஆபத்துகளை உடனடியாக தடுக்க வேண்டும். இளைஞர்கள் அதி லும் குறிப்பாக மாணவர்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையில் காவல்துறை, சமூக ஆர்வலர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பது பெற்றோர்களின் முதல் கடமை. ஆன்லைன் விளையாட்டு களை விளையாடுபவர்களுக்கு உரிய மனோதத்துவ பயிற்சி அளித்த வேண்டும். விளையாட்டுகளை ஸ்மார்ட்போன்கள், கணினியிலி ருந்து நீக்க வேண்டும். தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையினரின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் உடல், உளவி யல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதா னத்தை மறந்து விட்டனர். இது இளைய சமுதாயத்தின் மீதான அக் கறை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத் தின் மீதான அக்கறை ஆகும். ஆன்லைன் விளையாட்டுகளால் இளம் தலைமுறையினர் தங்களது பொன்னான வாய்ப்புகளை இழக் கின்றனர். தங்களது எதிர்காலத்தை ஆன்லைன் விளையாட்டுகளில் பண யம் வைக்கின்றனர் எனக் கூறிய நீதி பதிகள் ஆன்லைன் விளையாட்டு கள் தொடர்பாக ஒன்றிய அரசும், மாநில அரசும் பதிலளிக்க உத்தர விட்டனர். வழக்கு அக்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.