தூத்துக்குடி, மே21- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத் தில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் மே 22 திங்களன்று கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள பகுதி மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டம், வாலிபர், மாணவர், மாதர் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டன. போராட்டத்தின் 100 வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பேரணியாக மனு அளிக்க சென்ற னர். பொதுமக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய போராட்டத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை, பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடி தாக்குதலில் 15 பேர் படு கொலை செய்யப்பட்டனர். மேலும் 100 க்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடைபெற்ற நாளன்று விரைந்தோடிச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பகலாக இருந்து காயமடைந்து வந்திருந்த ஒவ்வொருவ ரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் திங்களன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப் படவுள்ளது.
தொடரும் போலீஸ் கட்டுப்பாடு
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் முத்துநகர் கடற்கரையில் ஞாயிறன்று மாலை மெழுகு வர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. மேலும் முத்துநகர் கடற்கரையில் எந்தவித நிகழ்ச்சியும் நடத்துவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்து நகர் மற்றும் நேரு பூங்காவில் ஞாயிற்றுக் கிழமை முழுவதும் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என பூங்கா நுழைவு வாயில்களில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இரண்டு பூங்கா கதவுகளும் மூடப்பட்டன. மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் முத்து நகர் கடற்கரை, நேரு பூங்கா ஆகிய இடங்க ளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் சம்பவம் நடை பெற்று 5 ஆண்டுகள் ஆகியும் காவல்துறை யினர் நிம்மதியாக நினைவஞ்சலி கூட செலுத்த விடாமல் பல்வேறு கட்டுப்பாடு களை உருவாக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.