states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு பரவல் தீவிரமாகியுள்ள நிலையில்,  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயா ளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் செவ்வாயன்று ஒரே நாளில் 2 பெண்கள் டெங்குகாய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். செவ்வா யன்று காலை குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய  குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி  காயத்ரி (19) என்பவர் உயிரிழந்த நிலையில்,  மாலையில்  தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா  ரோஷினி (28) என்ற பெண் உயிரிழந்தார். இதில்  காயத்ரி கல்லூரி மாணவி ஆவார்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அரசு மருத்துவ மனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளி யிடபட்டுள்ளது. நோயுற்ற மற்றும் அறிகுறிகள் உடைய நபர்களை கையாண்ட பின் 20 நொடிகள்  சோப்பால் கைகழுவ வேண்டும் என மருத்து வர்கள், ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவால் ஒட்டு மொத்த மாநிலமே உருக்குலைந்தது. கனமழை வெள்ளத்தில் சிக்கி 270 பேர் பலியாகிய நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.5 கோடி நிவாரணம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.