மதுரை, ஜூன் 24- திருச்சி வேத பாடசாலை பொறுப்பாளரின் கவனக்குறைவு அலட்சியத்தால்தான் 3 பேர் பலி நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வேத பாடசாலை பொறுப்பாளருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகு திகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி வேதம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பாடசாலை யில் படிக்கும் திருவாரூர் மாவட் டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் , ஹரிபிரசாத், ஆந் திராவை சேர்ந்த அபிராம் ஆகிய மூன்று மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அவ ரது பெற்றோர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெற் றோர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் குருகுலத்தின் நிறுவனர் பத்ரி நாராயணன், பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவ் ஆகியோரை குற்ற வாளிகளாக சேர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர்கள் மனு தாக்கல் செய்திருந்த னர்.
இந்த வழக்கின் விசாரணை நீதி பதி இளந்திரையன் முன்பு சனிக்கிழ மையன்று நடைபெற்றது. அரசு தரப்பில் ஆஜரான குற்ற வியல் வழக்கறிஞர் அன்பு நீதி வாதி டுகையில், வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் யாரேனும் தவறு செய்தால் அவர்களை தண் டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற் றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்வது வழக்கம். சம்பவத்தன்று இறந்து போன மாணவர்கள் ஒரு வருக்கொருவர் சண்டையிட்டுள்ள னர். எனவே, இவர்களை தண்டிக் கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லப்பட்டதால் தான் இந்த உயி ரிழப்பு நடைபெற்றுள்ளது. இது அங்கு படித்த மாணவர்களிடம் விசா ரணை செய்து வாக்கு மூலமாக பெறப்பட்டுள்ளது. எனவே, இரு வருக்கும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்த நீதி பதி, இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக உள்ள வேத பாட சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாச ராவின் கவனக்குறைவு, அலட்சி யத்தால்தான் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது என தெரிகிறது. எனவே இவரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய் வது முக்கியமாக உள்ளதால் இவ ருக்கு முன் ஜாமீன் வழங்க முடி யாது என நீதிபதி உத்தரவிட்டார். முதல் மனுதாரர் நிறுவனர் பத்ரி நாரா யணனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.