states

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது?

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை 

மதுரை, மார்ச் 28-   நீதிமன்ற உத்தரவை நடை முறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன்  நீதிமன்ற அவமதிப்பு நடவ டிக்கை எடுக்கக்கூடாது என்று   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் ஆர். எம். கால னியைச் சேர்ந்த கண்ணன் என்ப வர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு வில்,  “திண்டுக்கல் காமராஜர்  பேருந்து நிலையம் மாநகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்பட்டு  வருகிறது. அங்கு கட்டப்பட் டுள்ள ஏராளமான கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  

கடந்த 2019 ஆம் ஆண்டு கடை களை புதுப்பித்து மறு கட்ட மைப்பு செய்வதற்காக கடை களை காலி செய்யுமாறு திண்டுக்  கல் மாநகராட்சி தரப்பில் உத்தர விடப்பட்டது. அதற்கு கடை  வியாபாரிகள் மறுத்த நிலையில், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்  னர் ஏற்கனவே கடை நடத்தியவர்  களுக்கு முன்னுரிமை அளிக்கப்  படும் என உறுதி அளிக்கப்ப டடது. அதைத்தொடர்ந்து வியா பாரிகள் கடையை காலி செய்த னர். ஆனால் கடை கட்டி முடிக்  கப்பட்ட பின்னர் முறையான ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.  இது தொடர்பாக அதிகாரிகளி டம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் விசாரணை முடியும் வரை 2 கடைகளை காலியாக வைக்க உத்தரவிட்டது.  ஆனால் திண்டுக்கல் மாநக ராட்சி ஆணையர் நீதிமன்ற  உத்தரவை நடைமுறைப்படுத் தாமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 34 கடைகளுக்குமான ஏல அறிவிப்பு நோட்டீசை வெளியிட்டுள்ளார்.  இது நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் அமைகிறது. ஆகவே நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்  கல் மாநகராட்சி ஆணையர் மீது  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசா ரணை செவ்வாயன்று  நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு நடை பெற்றது. அப்போது, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத் தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் நீதிமன்ற  அவமதிப்பு நடவடிக்கை எடுக்  கக்கூடாது? என்று கேள்வி  எழுப்பிய நீதிபதி, இதுதொடர் பாக விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  வழக்கை நான்கு வாரங்களுக்கு  ஒத்திவைத்தார்.