சென்னை, மே 10- தமிழ்நாட்டில் தோண்டப்படும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலை மையில், புதன்கிழமை (மே 10) தலை மைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நக ராட்சி நிர்வாகத் துறைகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால், சாலைகளில் கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. அதேபோல், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை யும் பன்மடங்கு உயர்ந்து வரு கிறது. இன்றைய சூழ்நிலையில், சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமானதே. துறைகளுக்குள் இருக்கிற பிரச்சனைகள், குறிப்பாக, சுற்றுச் சூழல், நில எடுப்புப் பிரிவுகளில் போது மான எண்ணிக்கையில் மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தல், நிர்வாக ரீதியிலான தாமதங்களைத் தவிர்த்தல் போன்றவற்றில் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும். தற்போது நான் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் தவிர்த்து, பல்வேறு இதர காரணங்க ளுக்காக சாலைகள் தோண்டப் பட்டுள்ளதைக் காண்கிறேன். இது சாலை உபயோகிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்து வருவ தோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும்; இதனை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட வேண்டும். சென்னை புறநகர்ப் பகுதிகளில் செயல் படுத்தப்படக்கூடிய திட்டப் பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணி முன்னேற்றத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது உடனடியாக தலைமைச் செயலாளர் அல்லது துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்க்கப்பட வேண்டும். அனைத்து முக்கிய பணிகளின் முன்னேற்றத்தையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது ஆய்வு செய்த பணிக ளுக்கெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2021-2022 ஆம் ஆண்டுப் பணிகள், கடந்த ஆண்டில் மேற்கொள் ளப்பட்ட பணிகள் ஆகிய அனைத்தை யும் தீவிரமாகக் கண்காணித்து, மிக விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு, இ. பெரியசாமி, எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின், தலை மைச் செயலாளர் வெ. இறையன்பு, துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.