states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜகவின் சின்னமான தாமரை வடிவில் விமானநிலையம்!

கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான நிலையம் கட்டப் பட்டுள்ளது. பெங்களூருவுக்கு அடுத்தபடியாக அம்மாநிலத்தின் 2-வது பெரிய விமான நிலையமாகவும், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை வடிவிலும் அமைக்கப்பட்டுள்ள, இந்த  விமான நிலையத்தை, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 80-ஆவது நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று திறந்து வைத்தார். கர்நாடகத்திற்கு விரைவில்  சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரூ. 190 கோடி செலவில் மறுவடிவ மைக்கப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டடத்தையும், ரூ. 930 கோடியிலான லோண்டா - பெல காவி இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.

2024 தேர்தலோடு பாஜக அழித்தொழிக்கப்படும்: லாலு

“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்களானது, சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு எதிரானது. 2024 மக்களவை மற்றும் 2025 சட்டமன்றத் தேர் ததல்களில் நாங்கள் (மகா கூட்டணி) பாஜக-வை அழித்து விடுவோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை. அரசியலமைப்பை மாற்றி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றன. எங்கள் போராட்டம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது. பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டு மக்களுக்கு எதிரானது. அதனாலேயே இவற்றை அழிக்க வேண்டும் என கூறுகிறோம்” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.

பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி போராட்டம்!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில் பாஜக  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்  தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மோடி அரசின் புலனாய்வுத் துறை  (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. தற்போது அவரை 5 நாட்கள் காவலிலும் எடுத்துள்  ளது. இதனிடையே மணீஷ் சிசோடியா கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலு வலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்களன்று தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தையும், பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தையும் ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டனர்.

அதானி ஊழலுக்கு எதிராக மார்ச் 13-இல் காங்கிரஸ் பேரணி!

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி, மோசடி செய்தே உலக பணக்  காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம்  அம்பலப்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், மோடி அரசு இப்போது வரை கள்ளமவுனம் சாதித்து வருகிறது. இந்நிலையில், அதானி குழும முறைகேடு மீது நட வடிக்கை கோரி, மார்ச் 13 அன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகை யை நோக்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

‘ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர்’ 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் சாவர்க்கர் நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா சார்பில்  ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர்  மற்றும் இதர சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற கட்டடத்துக்கு செல்லும் சாலைக்கும் சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சாவர்க்கரின் கோழைத்தனம், ஒருபோதும் தேசியவாதம் ஆகாது!

“சீனாவின் பொருளாதாரம் நம்மை விட பெரியது, அவர்களை எப்படி எதிர்த்து போராடு வது என்று ஒன்றிய அமைச்சர் (ஜெய்சங்கர்) சொல்வது தேசியவாதம் அல்ல, கோழைத்  தனம். நாம் ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டபோது நமது பொருளாதாரம் மிகப் பெரியதாக  இருந்ததா? எனவே, இது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம். உங்களை விட வலிமையான வர் முன் தலைவணங்குவது சாவர்க்கரின் சித்தாந்தம். சீனாவின் பொருளாதாரம் நமது பொருளா தாரத்தை விட அதிகமாக இருப்பதால், அவர்களுடன் நம்மால் போராட முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். இதுதான் தேசியவாதமா? இது கோழைத்தனம்’’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவும் ஒவைசியும் ‘ராம்-ஷியாம் ஜோடி’: சஞ்சய் ராவத்

“தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், சுப்ரியா சுலே தலைவர்களாக முடியும் போது, உத்தவ்  தாக்கரே ஒரு தந்தையின் மகன் என்ற தகுதியால் மட்டுமே தலைவராக முடியும் போது,  ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் தலைவராக முடியும் போது, மகாராஷ்டிரா முஸ்லிம்கள்,  சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே போன்று (தலைவர்களாக) இருக்க முடி யாதா?” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், பாஜக வும், அசாதுதீன் ஓவைசியும் ‘ராம் மற்றும் ஷியாம் ஜோடி’ (ஹிந்தி திரைப்படத்தில் நண்பர்களாக வரும் கதாபாத்திரங்கள்) என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செயல்படுகிறது: அஜித்பவார் 

“மகாராஷ்டிர மாநில அரசு சாமானிய மக்களின் துயரை தீர்க்கும் முக்கிய பிரச்சனைகளில் கவ னம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களின் சிரித்த முகத்தை வெளியில் காட்டிக்கொள்வ தற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஊதாரித்தனமாக செலவு செய்கிறது. கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது. ஆனால் இது வரை அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரண தொகை  சென்று சேரவில்லை” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் விமர்சித்துள்ளார்.

நெட் தேர்வில் தொடரும் குளறுபடி தேர்வெழுத ஆயிரங்களை செலவழிக்க வேண்டிய கட்டாயம்

மதுரை, பிப். 27- யுஜிசி சார்பில் உதவிப் பேராசிரியர் பணியிடங்க ளுக்கான “நெட்” தேர்வு  மார்ச் 1-ஆம் தேதி நடைபெறு கிறது. தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாண வர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையங் கள் ஒதுக்கீடு செய்வதில் தேர்வு முகமை குழப்பங்களைச் செய்துள்ளது. தமிழ்நாடு என்றாலே இப்படித் தான் திட்ட மிட்டுச் செய்வார்களோ என்ற கேள்வி எழாமல் இல்லை. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர், தான் தேர்வெழுத விரும்பும் மாவட்டங்களாக விருதுநகர்,  மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி என பரிந்துரைத்துள் ளார். கடைசியில் அவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதே போல் சிவகாசியைச் சேர்ந்த மாணவர்ஒருவர் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, காஞ்சிபுரம் என விருப்ப  மாவட்டங்களை பரிந்துரைத்துள்ளார். அவருக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விருது நகர், மதுரை, திருச்சிராப்பள்ளி என விருப்ப மாவட்டங்க ளைப் பரிந்துரைத்துள்ளார். அவருக்கு கோயம்புத்தூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி தேர்வெழுதுவதற்கு இரண்டு நாட்க ளுக்கு முன்னராக பெற்றோருடன் இவர்கள் சம்பந்தப் பட்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு அறை எடுத்துத் தங்க வேண்டும். போக்குவரத்து செலவு உட்பட சில ஆயிரங்களை ஒவ்வொருவரும் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இப்படி எத்தனை ஆயிரம் மாணவர்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளனரோ தெரிய வில்லை.

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை,பிப்.27- தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக திங்களன்று (பிப்.27) தில்லி சென்றார். அங்கு விமான நிலையத்தில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பி னர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மாலை 3 மணிக்கு தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், தில்லி  முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும்  தில்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள்  ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, தில்லியில் பணிபுரியும் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்துரை யாடினார். பின்னர் இரவு 7 மணிக்கு பஞ்சாப்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, இரவு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். செவ்வாய்க்கிழமை (பிப்.28) மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். பின்னர் ஒன்றிய விளை யாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கிறார்.

மார்ச் 9 இல் அமைச்சரவைக் கூட்டம் 

சென்னை,பிப்.27- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் மார்ச் 9 அன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 17 ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நி லையில் பட்ஜெட்டிற்கு அமைச்சர வையைக் கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, முதல்வர் தலை மையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.  மகளிருக்கான  உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், இந்த  பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் காய்ச்சல்  அதிகரிப்பு: புதிய வகை வைரசை கண்டறிய ஆய்வு

சென்னை,பிப்.27- தமிழ்நாட்டில், பருவ மழை  மற்றும் குளிர் காலம் முடிவடைந்தா லும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில  வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதன் மூலம் 5 முதல் 7  நாட்களில் காய்ச்சல் குணமடைந் தாலும் சளி, இருமல் ஆகியவை 2  வாரங்களுக்கு மேல் தொடரு கின்றன. மேலும் ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதில்  தொற்றிக் கொள்வதால் பொதுமக் களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த காய்ச்சல் எந்த வகை வைரசால் பரவி வரு கிறது என்பதை கண்டறியும் ஆய்வை  பொது சுகாதாரத் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:- இன்ப்ளுயன்சா வைரஸ், ஆர்.எஸ்.வி. எனப்படும் நுரையீ ரல் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் சென்னையில் அதிக மாக பரவி வருவதாக தெரிகிறது. காய்ச்சல், உடல் வலியுடன் இரு மல் பாதிப்பும் இருப்பதால் சுவாசப் பாதையின் மேற் பகுதியில் ஏற்படும்  தொற்றாகவே இதை கருத முடிகி றது. இந்த வகை பாதிப்புகள் ஒரு வாரத்தில் குணம் அடைகின்றன. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் புதிய வகை வைரஸ் எந்த வகையானது என்பதை கண்ட றிய பாதிக்கப்பட்டவர்களின் சளி  மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு  செய்ய உள்ளோம். பொது  சுகாதாரத் துறை ஆய்வகத்திலேயே அதற்கான வசதிகள் உள்ளன. பரிசோதனை முடிவுகள் உடனுக் குடன் தெரிய வரும் என்பதால் மக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல் எளிதில் வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கட்டம் தொடங்குகிறது மதுரோ கருத்து

காரகஸ், பிப்.27- வெனிசுலா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கிடை யிலான ஒத்துழைப்பில் புதிய கட்டம் தொடங்குவதாக வெனி சுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். இரு தரப்பு தூதரக உறவு மீண்டும் உருவாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியான செய்தியாகத் தெரிவிப்பதாகக் கூறிய மதுரோ, “பிரேசில் கூட்டுக் குடியரசு மற்றும் பொலி வாரிய வெனிசுலாக் குடியரசு ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுக்கான வழி உருவாக்கப் பட்டுள்ளது. இரு சகோதர மக்களுக்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தப் புதிய கட்டத்தை நான் கொண்டாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார். பிரேசிலுக்கான வெனிசுலாவின் தூதராக நியமிக்கப் பட்டுள்ள மானுவல் வாடெல், வெனிசுலாவின் வெளியுறவு த்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இரு நாடுகளிலும் உள்ள தூதரக அலுவலகங்களைத் திறப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் இந்த நடவடிக்கைகளுக்குத் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவின் உள்விவகாரத்தில் தலையிடும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோவை அமெரிக்கா சட்டவிரோதமாக ஜனாதிபதியாக அறிவித்தது. அதற்கு பிரேசிலின் ஜனாதிபதியாக இருந்த ஜெய்ர் போல்சானாரோ  ஆதரவு தந்தார். மேலும், வெனிசுலாவின் தலைநகர் காரகசில் இருந்த பிரேசிலின் தூதரகத்தையும் இழுத்து மூடினார். தற்போது இடதுசாரித் தலைவரான லூலா வெற்றி பெற்றுள்ள நிலையில், மீண்டும் இரு தரப்பு உறவுகளும் மலரத் தொடங்கியிருக்கின்றன.