states

போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக ஹமாஸ் அறிவிப்பு!

காசா/டெல் அவிவ், நவ. 27 - இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நான்குநாள் தற்காலிக போர் நிறுத்தம் திங்கட்கிழமையுடன் முடி வுக்கு வந்தது. இதனால் மீண்டும் யுத்தம் துவங்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு  அறிவித்துளளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க கத்தார், எகிப்து நாடுகள் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், அதற்கு ஹமாஸ் அமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ்  50 பணயக் கைதிகளையும், இஸ்ரேல் தனது சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை யும் விடுவிக்க ஒப்புக் கொண்டன. இதில், வெள்ளிக்கிழமை துவங்கி முதல் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்த  58 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.

ஆனால் இஸ்ரேல் தனது சிறைகளில் இரு ந்து பெண்கள் குழந்தைகள் என 117 பாலஸ் தீனர்களை மட்டுமே விடுதலைசெய்துள்ளது. எனினும் தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஹமாஸ் குழு போர் நிறுத்தம் நீட்டிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள், எரிபொருட்கள் என அதிகள விலான நிவாரணப் பொருட்களை கொண்டு  செல்ல முடியும். ஆனால், ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஒப்புக்கொள்ளப்பட்ட 50 நபர்கள் மட்டுமன்றி, மேலும்  10 நபர்களை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என  தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், போர் நிறுத்தத்திற்கு இடையிலும், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு  பாலஸ்தீனப் பகுதியான மேற்கு கரையில் பெண்கள், குழந்தைகள் மீது தொடர்  தாக்குதலை நடத்தி, கைது நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. மேலும் ஒரு சிறுவன் மற்றும் பெண்கள் என 10-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை கொலை செய்துள்ளது. காசா - இஸ்ரேல் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று ஐ.நா. தகவல் தொடர்பு இயக்குநர் ஜுலியட் டூமா அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்தம் நீட்டிப்பாகும் என்று எதிர்பார்ப்பதாக பாலஸ்தீன அகதிகளுக் கான ஐநா அமைப்பும் நம்பிக்கை தெரி வித்துள்ளது.