states

நெருக்கடியிலிருந்து மீண்டு கேரளம் முன்னேறும் நூறு நாள் திட்டம் அனைவரையும் எட்டும்: முதல்வர்

4,33,644 வேலை வாய்ப்புகள்

மூன்றாம் கட்ட செயல்திட்ட நிகழ்ச்சிகள் பிப்ரவரி 10 முதல் மே 20 வரை நடைபெறும். பல்வேறு துறைகளின் உதவியுடன் பல திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மூன்றா வது நூறு நாள் செயல்திட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ரூ.15,896.03 கோடி மதிப்பி லான திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இதில் மொத்தம் 1284 திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள் ளன. இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் 4,33,644 வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

திருவனந்தபுரம், பிப்.11- பெரிய நெருக்கடிகளால் கேரளம் சோர்வடையாமல் வளர்ந்தது. ஆனால் அதில் மட்டும் எங்களுக்கு திருப்தி இல்லை. அங்கிருந்து முன்னேறி புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். இதுவே அரசு மேற்கொண்டுள்ள பணி என்றும், ஒரு மாவட்டத்தையும், மக்க ளது வாழ்க்கையையும் தொடாமல் நூறு நாள் வேலைத் திட்டம் கடந்து செல்லாது என்றும் முதல்வர் கூறினார். மாநில அளவிலான மூன்றாவது 100 நாள் செயல் திட்டத்தை வெள்ளியன்று (பிப்.10) முதல்வர் துவக்கி வைத்தார். பின்னர் இத்திட்டத்தின் ஒரு பகுதி யாக முட்டத்தறயில் 400 மீனவர்களு க்கு கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடி யிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், “சொன்னதை செயல்படுத்துவதே அரசின் நடைமுறை. தற்காலிக நோக் கத்திற்காக பொய்யான வாக்குறு திகளை வழங்கும் நடைமுறை எப்போ தும் கிடையாது. நாட்டுக்குத் தேவை யானவை மறுக்கப்படும்போது, மக்கள் இயல்பாகவே அதற்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்புவார்கள்.

சிலர் இந்த நேரத்தில் தங்களுக்குத் தகுதியானதைக் கேட்க விரும்புகி றார்கள். நாட்டுக்கு உரிமையானதை கேட்டு வாங்கும் இந்த நினைவு படுத்தல் கூடாது என சிலர் விரும்பு கின்றனர். நாட்டுக்கு உரிமையானதை நிராகரிக்கும் வகையில் வரி பங்கில் தகுதியான விகிதம் தடை செய்யப்படு கிறது. புலம்பெயர்ந்தோர் வழங்குவ தாக தெரிவித்த உதவியை தடை செய்த தையும் நாம் பார்த்தோம். இத்தகைய திட்டமிட்ட நோக்கங்கள் வெற்றிபெறக் கூடாது. அதற்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள நாம் முன்வர வேண்டும். எத்தகைய பாதகமான சூழ்நிலை யையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.   என்ன சூழ்நிலை உள்ளது, யார் அதை உருவாக்கியது, எதற்காக உருவாக்கப்பட்டது என்று பார்க்கா மல் சிலர் நிலைப்பாடு மேற்கொள்கி றார்கள். இது மாநிலத்தை பலவீனப் படுத்தும் உள்நோக்கம் கொண்ட தாகும். பகுத்தறிவுடன் இதுபோன்ற செயல்களை புரிந்துகொண்டு, நிலைப்பாடு மேற்கொள்ளும் கேரள மக்களை நம்மால் பார்க்க முடியும். மாநிலத்தை பொருளாதார ரீதியாக சிரமத்துக்கு உள்ளாக்கும் சூழ்நிலை உள்ள போதிலும், அதை எதிர்கொள்ள மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது” என்றார்.