அரசாங்க உத்தரவாத குழு தலைவராக தம்பிதுரை நியமனம்!
மாநிலங்களவை அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு தலைவராக அதிமுக எம்.பி. தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை நெறிமுறைகளின் குழுத் தலைவ ராக பாஜகவின் மூத்தத் தலைவர் பிரகாஷ் ஜவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்க ளவை தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான ஜகதீப் தன்கர் இதற்கான உத்தரவு களைப் பிறப்பித்துள்ளார்.
திமுக-அதிமுக ‘அண்ணன், தம்பி’ இயக்கம்தான்: ஓபிஎஸ்
“திமுக-வும் அதிமுக-வும் அண்ணன், தம்பி இயக்கம்தான். ஆனால், நாங்கள் மாறுபட்ட பாதை யில் சென்று கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள்” என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், “அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்று டிடிவி தினகரன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். டிடிவியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது வாய்ப்பு கிடைத்தால் அவரை யும் நான் சந்திப்பேன்” என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
37 ஆண்டுகள் மனநிறைவுடன் பணியாற்றினேன்: யு.யு. லலித்
உச்ச நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதி யு.யு. லலித், நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். முன்னதாக திங்களன்று நடைபெற்ற பணிஓய்வு பாராட்டு விழாக்களில் லலித் கலந்து கொண்டார். அப்போது, “37 ஆண்டு வாழ்க்கைப் பயணத்தை உச்ச நீதி மன்றத்தில் கழித்துள்ளேன். எனது பதவிக் காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வாகும். என்னால் இயன்றதை வழக்கறி ஞர்களுக்கு செய்துள்ளேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன். எனது 74 நாட்கள் பதவிக் காலத்தில் 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். 6 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்துள்ளேன். எனது பணி மனநிறைவை தந்துள்ளது” என்று பேசியுள்ளார்.
சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.30 வரை உயர வாய்ப்பு
சிமெண்ட் நிறுவனங்கள் நவம்பர் மாதத்தில் சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ. 10 முதல் ரூ. 30 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக ‘எம்.கே. பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்’ தெரிவித்துள் ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சிமெண்ட் விலை ரூ.3 முதல் 4 வரை (மூட்டை) உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் மாதங்களில் சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அனைத்து முக்கியத் திருவிழாக்களும் முடிவடைந்து விட்டதால், கட்டுமானப் பணிகளின் வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதே இதற்கு காரணமாகும்.
‘இந்து என்ற சொல்லே பெர்சியாவிலிருந்து வந்ததுதான்’
“இந்து மதம் நம் மக்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டுள்ளது. ’இந்து’ என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? பெர்சியாவில் இருந்துதான். இந்தியாவிற்கும், பெர்சியா விற்கும் என்ன தொடர்பு? ‘இந்து’ எப்படி நம் மதம் ஆகும்? வாட்ஸ்-ஆப், விக்கிபீடியா ஆகிய வற்றில் தேடிப் பாருங்கள். இந்த வார்த்தை நம்முடையது அல்ல. இதற்கு மோசமான அர்த்தம் இருக்கிறது. தெரிந்தால் வருத்தப்படுவீர்கள். அப்படியிருக்கையில் அதை ஏன் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறீர்கள்?” என கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலை வர் சதீஷ் ஜர்கிஹோலி கேள்வி எழுப்பியுள்ளார்.
10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனப்பான்மை!
“நான் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் இந்திரா சஹானியின் தீர்ப்புக்கு பிறகு அது என்னவாக இருந்தது? இன்று அதற்கு மாறாக எவ்வாறு யு-டர்ன் எடுத்தது...? உச்ச நீதிமன்றத்தின் இந்த உயர்சாதி மனப்பான்மை கண்டு வேதனை அடைகிறேன். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.-க்கு இடஒதுக்கீடு விஷயங்கள் வரும்போது மட்டுமே உச்ச நீதிமன்றம் 50 சதவிகித வரம்பை நினை வூட்டுகிறது” என்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
‘காட்டுயிர் காப்பகம்’
சென்னை,நவ.8- தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் 686 ச.கி.மீ. பகுதியை ‘காட்டுயிர் காப்பகமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்ப கத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டு யிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவ னம் செயல்படுத்தி வரும் பசுமை இயக் கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத் தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த பதிவில் கூறி யுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,நவ.8- தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசை யில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்க ரையை நோக்கி நகரக்கூடும். இதனால் நவ. 10,12 ஆகிய தேதிகளில் புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக் குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்
சென்னை, நவ.8- பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதி யில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்த வர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். கப்பல் தொடர்பு எண் 870776789032. எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்பு கொண்டு, கடற்படை மீட்பு கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் சமூக நீதி சட்டம் இயற்ற வல்லுநர் குழு
சென்னை, நவ.8- தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்ப டுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பான நட வடிக்கைகளை மேற்கொள்ள நிர்வாக சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள்கொண்ட சட்ட வல்லுநர் குழுவை அமைத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தர விட்டுள்ளார். இந்த குழுவில் உச்ச நீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன், சட்ட விவகாரங்கள் துறையின் அரசு செயலாளர் கார்த்திகேயன், சட்ட இயற்றுதல் துறையின் செயலாளர் கோபி ரவிக்குமார், சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வா ணையத்தின் வழக்கறிஞர் விஎன்வி நிறைமதி, மூத்த வழக் கறிஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ள னர்.