கோவை, டிச.15-
தாம்பரம்-கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளாதக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் தாம்பரம்-கோவை வாராந்திர ரயில் மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கோவை-தாம்பரம் வாராந்திர ரெயில் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.