திருப்பூர், பிப். 1 - ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் பட்ஜெட்டில் ஜவுளித் தொழில் பாதுகாப்புக்கு ஏதுவும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் புதன்கிழமை பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிலையில், இதுகுறித்து டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: வழக்கமாக பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பு தொழில் துறையினரை அரசு சார்பில் அழைத்துப் பேசுகின்றனர். ஆனால் தொழில் துறையினர் என்று சொல்லி கார்ப்பரேட் பிரிவினரிடம் கருத்துக் கேட்கின்றனர். ஆனால் நம் நாட்டில் தொழில் துறையில் 90 சதவிகிதம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங் களாகத் தான் சிறு தொழில் துறைக்குள் உள்ளன. பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினரிடம் கருத்துக் கேட்பதில்லை. எங்களைப் போன்றவர்களிடம் கருத்துக் கேட்டால் எங்கள் பின்னலாடைத் தொழி லுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளி வாகக் கூற முடியும். ஆனால் எங்களிடம் கருத்துக் கேட்காத நிலையில், கார்ப்பரேட்டு களின் தேவைகளைத்தான் பட்ஜெட்டில் அறிவிக்கின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பு வழங்கக்கூடியதாக ஜவுளித் தொழில் உள்ளது. எனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஜவுளித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த பட்ஜெட் ஜவுளி துறைக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறு, குறு தொழி லுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என அறி வித்துள்ளது மிக குறைந்த அளவு தொகை ஆகும். மூலப்பொருள் விலையை நிலையாக வைக்க பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம், வங்கி கடன்உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம்.ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்தார்.