தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் அங்கன்வாடி அமைப்பாளர்கள் மையங்களை பூட்டி வட்டார அலுவலர்களிடம் சாவிகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சேலத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.
மே மாதம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாகி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ஊழியர்களுக்கு 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் வழங்க வேண்டும், முறையான பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம். சரோஜா மாவட்ட செயலாளர் அ. மனோன்மணி மாநில செயற்குழு உறுப்பினர் ப.சாவித்திரி உள்ளிட்டு சிஐடியு தலைவர்கள் பங்கேற்றனர்.