states

தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுக!

 சென்னை,அக்.23- உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி  வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே  பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என்று  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தலைவர்  ஜெயந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் வெளியிட்ட  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு  வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி  மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத் தன்று, காலை 6 முதல் 7 மணி வரையிலும்,  இரவு 7 முதல் 8மணி வரை மட்டுமே பட்டாசு களை வெடிக்கவேண்டும் எனத் தெரி விக்கப்படுகிறது. பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப் பிடிக்க வேண்டியவை: பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட  பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்ப தற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங் கள் மூலம் முயற்சிக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை: அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்  தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும்  இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத்  தவிர்க்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும்  எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.