வணிகவரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசா ணை வெளியிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி பட்டய படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு ஜூன் 23-ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களு க்கு ஜூன் 22-ஆம் தேதி யும் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அரசு தேர்வு கள் இயக்ககம் அறிவித்து ள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கா னிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப் பட்டு வரும் நிலையில், அந்நாட்டு பெண்கள் தலைநகர் காபூலில் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களு க்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களைப் பதி வேற்றம் செய்யவும், ஒரே நாளில் விண்ணப்பங் களை சனிக்கிழமைக்குள் இணையதளத்தில் பதி வேற்றம் செய்ய அறநிலை யத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தரவு தரகர் மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக இன்காக்னி அறிக்கை வெளியிட்டுள் ளது. கடந்த 20 ஆண்டு களில் 10 தரவு தரகர் மீறல்களில் 1.8 கோடிக் கும் அதிகமான இந்தியர் களின் தனிப்பட்ட பதிவு கள் கசிந்துள்ளதாக அறி க்கை குறிப்பிட்டுள்ளது.முதலிடத்தில் அமெ ரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) குடியிருப்புப் பள்ளியில் உணவு விஷமாக மாறி யதில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
ஜப்பானிய வாகனத் தயா ரிப்பாளரான மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் 2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து புதிய கார் விற்பனையிலும் ஹைப் ரிட் வகைகளை (வேகத் தில் முதன்மையானது) கொண்டு வரவுள்ளதாக கூறியுள்ளது
பஞ்சாப்பில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் தில்லி யைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப் பட்டார்.
மும்பையில் உள்ள கோரேகான் பிலிம் சிட்டி யில் உள்ள ‘கும் ஹை கிசிகே பியார் மே’ என்ற தொலைக்காட்சி தொட ரின் தொகுப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற் படவில்லை என்றாலும் பிலிம் ஸ்டுடியோவின் தரை தளத்தில் தீ பரவி நாசமாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட் டியம் பாலசமுத்திரம் அர சுப் பள்ளி வளாகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் மவுலீஸ்வரன் சக மாண வர்கள் தாக்கியதில் உயி ரிழந்தார்.
உலகச் செய்திகள்
ஈரானின் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது கூடுதல் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்தப் புதிய தடைகள் பெண்கள் மீதான குற்றங்களுக்காக விதிக்கப்பட்டதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்திருக்கிறது. சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி தடை விதிக்கப்பட்டவர்களில் ஈரானின் இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகளும் இருக்கிறார்கள். இந்தப் புதிய தடைகளை ஈரான் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளனர். யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில் 49 விழுக்காட்டினருக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. சுமார் 30 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் ஆப்கானிஸ்தானில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகைவெளியிடு வதைக் குறைக்க முழுமையாக ஒத்துழைக்கத் தாங்கள் தயார் என்று வியட்நாம் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற அமைச்சர்கள் மாநாட்டில் வியட்நாமின் துணை பிரதமர் டிராங் ஹாங் ஹா இதைத் தெரிவித்தார். பாரிஸ் சுற்றுச்சூழல் உடன்பாட்டை நிறைவேற்றுவது எளிதல்ல என்றும், நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் அரசுகளுக்கிடையில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.