சென்னை,டிச.23 உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது விவசாயிகளுக்கு பெறுத்த ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாடு அரசு நியாய விலை கடைகள் மூலம் வழங்கி வந்த பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒன்று வழங்கப்பட்டு வந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்காகவே விளைவிக்கப் படும் செங்கரும்புக்கு ஓரளவு கட்டு படியான விலை கிடைத்து வந்தது. இந்த ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடப்பு ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மாநிலம் முழுவதும் பரவலான இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கூடு தலான பரப்பில் கரும்பு சாகுபடி செய் யப்பட்டுள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள தொகுப்பில் செங் கரும்பு இடம் பெறாமல் உள்ளதால் இந்த விவசாயிகளுக்கு கடுமையான விலைவீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மாநில அரசு பரிசீலனை செய்து அரசு அறிவித்த தொகுப்பில் செங்கரும்பையும் இணைத்து வழங்க வேண்டும். விவசாயிகளிடம் இடைத்தரகர் மூலம் அரசு கொள் முதல் செய்யாமல் நேரடியாக அரசு அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கொடுத்து கொள்முதல் செய்து வழங்க வேண்டு மென தமிழக அரசை கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.