states

பொற்பனைக் கோட்டையில் அகழ்வாய்வு நடத்த தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு அனுமதி

புதுக்கோட்டை, பிப்.11-  தொல்லியல் சான்றுகளில் புதுக்கோட்டையின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுகிற பொற்ப னைக்கோட்டை அகழ்வாய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தொடர் கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொட ரப்பட்டது.  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் பெயரில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதாடி அகழாய்வு நடத்துவதற்கான உத்தரவு பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இள.இனி யனை இயக்குநராகக் கொண்டு அகழ்வாய்வு தொடங்கி வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் பணியைத் தொடங்கி வைத்தனர். புதிய  கண்டுபிடிப்புகளுடன் அகழ்வாய்வு பணி நிறை வடைந்தது. விரிவான அளவில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்ப டையில், பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு மேற்  கொள்ள இருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை  மேற்கொள்ளவிருக்கிறது என்று அறிவிப்பு வெளி யிட்டிருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு அனுமதி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.