முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் தமிழ்நாடு முதல்வர்
சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அடுத்த மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் அடுத்தாண்டு ஜன வரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே 23ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பய ணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு ஏற்ற வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக வும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறார் இல்லத்தில் இருந்து தப்பிய நான்கு சிறுவர்கள்
சென்னை, ஏப். 23- சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து நான்கு சிறார்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் சமூக பாது காப்புத் துறையின் கீழ் இயங்கும், அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பெற்றோர்களால் கைவிடப்டப்பட்ட சிறுவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள சிறுவர்கள் உட்பட பல்வேறு சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், காரை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையிலும் பயின்று வருகின்றனர். இப்படி இங்கு மொத்தம் 60க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி பயின்றுவருகின்றனர். அவர் களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு தேர்வு முடிவடைந் துள்ளதால் குறிப்பிட்ட அந்த மாண வர்கள் தங்களது வீட்டிற்குச் திரும்பி யுள்ளனர். மீதமுள்ள மாணவர்களில் சூர்யா (எ) காட்டு ராஜா (10), பூபதி (12), சூர்யா (13), தினேஷ் (10) ஆகிய நான்கு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது சிறுவர்கள் தப்பியோடியதை அறிந்த அரசினர் குழந்தைகள் இல்ல பொறுப்பு கண்காணிப்பாளர் ராதே கண்ணன், இதுகுறித்து ராணிப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவர் களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வென்றால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் : மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்.23- மக்களவைத் தேர்தலில் திமுக முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது” என்று திமுக தலைவரும், தமிழ் நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவால யத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஞாயிறன்று (ஏப்.23) நடைபெற்ற கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வா க்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறினார். மேலும், ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும், மோசமான நிதிச்சூழலிலும் தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாக அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி ஆங்காங்கே பூத் கமிட்டி களை அமைக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்திருக்கிறோம். எனவே அந்த இலக்கை நாம் நிறை வேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். அதை மனதில் பதிய வைத்துக்கொண்டு கட்சி நிர்வாகிகள் செயல்படவேண்டும் என்றார்.
ஐபிஎஸ் அதிகாரி என்ற நினைப்பிலேயே இருக்கிறார் ஆளுநர் ரவி: நீதிபதி சந்துரு
புதுச்சேரி, ஏப். 23- புதுச்சேரியில் மணற்கேணி ஆய்வெளி இலக்கிய அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. “கேசவானந்த பாரதி தீர்ப்பும் அரசியலமைப்பு சட்டத்தின் பாது காப்பும்” என்ற தலைப்பில் நீதிபதி சந்துரு பேசுகையில், தான் இன்னும் ஐ.பி.எஸ் என்று தமிழ்நாடு ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆளு நரை கண்டித்து தீர்மானம் இயற்றும் சட்டமன்றத்தை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆளுநரை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்க லாம் என திட்டமிட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் ஸ்திரத்தன்மையை அசைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படு கிறது. இதனால் நாட்டில் அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை உருவாகி வருகிறது. நீதிபதிகள் செல்லக்கூடிய போக்கு 2 வழிகளில் உள்ளது. அரசிய லமைப்பு சட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதனை நம்பாமல் சிலர் அந்த அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள். துறவிகள் மாநாட்டில் வேதங்கள் ஓதுவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். பள்ளிப் பாடத் திட்டத்தில் வரலாற்றை திருத்தி எழுதுகிறார்கள். இந்திய அரசி யல் அமைப்பு சட்டத்தை மாற்று வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற நாடாளு மன்றத்திற்கும் அதிகாரம் இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை ஒருபோதும் மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்றார். மோடியை விமர்சனம் செய்யும் யாரும் நீதிபதியாக அமர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. உளவு அமைப்புகளை நம்பாமல் தற்போது அனைத்து சமூக வலைதளங்களையும் ஒன்றிய அரசு கண்காணித்து வருகிறது என்று சந்துரு கூறினார்.
தொழிலாளர் உரிமையை பறிக்காதீர்!
போக்குவரத்து ஓய்வூதியர்கள் எதிர்ப்பு
சென்னை, ஏப்.23- தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை முதலாளிகளிடம் சமர்ப்பணம் செய்யும் தொழிலாளர் விரோத மசோதாவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற் றோர் நல அமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் கே.கர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்லாண்டு காலம் போராடிப் பெற்ற 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோட்பாட்டை குழி தோண்டி புதைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப் பது கண்டனத்திற்குரியது. தொழில் முக்கியம் என்று கூறும் அரசுகள் தொழிலாளிகளை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா? புதிய பென்சன் திட்டத்தை ஒன்றிய அரசு அமலாக்குவதற்கு முன்பே தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமல்படுத்தி யது. தற்போது தொழிலாளர் சட்டத் தொகுப்பை ஒன்றிய அரசு அமலாக்கு வதற்கு முன்னே தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சட்ட திருத்தம் மேற்கொண்டுள் ளது. ஆட்சி மாறினாலும் கொள்கை கள் மாறாத அவலம் நீடிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு தொழிலா ளர் விரோத சட்ட திருத்த மசோ தாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.