தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறது
சென்னை, மே 1- தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் மே 2 அன்று நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட் டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலி யுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது. தமிழ்நாட்டில் புதிய தொழிற் சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது, பல்வேறு கொள்கை முடிவு கள் இந்த அமைச்சரவை கூட்டத் தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோ சனை நடத்தப்பட உள்ளதாக கூறப் படுகிறது. செவ்வாய்கிழமை (மே 2) காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்ச ரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் அதிகார பூர்வமாக அரசு அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மீன் விலை கடுமையாக உயர்வு
போரூர், மே 1- தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இது வருகிற ஜுன்14-ந்தேதிவரை 61 நாட்கள் அமலில் இருப்பதால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பைபர் படகுகளில் பிடிக்கப்படும் சிறியவகை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. தற்போது சென்னை வானகரம் மீன் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து மீன் வரத்து அதிகரித்து உள்ளது. வானகரம் மீன் சந்தைக்கு சாதாரண நாட்களில் தினசரி 25 வாக னங்கள் மூலம் சுமார் 125 டன் மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து 2 மடங்காக அதிகரித்து காணப்பட்டது. மே தினம் விடுமுறை நாள் என்பதால் திங்கட் கிழமை அதிகாலை முதலே மீன் வாங்க வானகரம் சந்தையில் பொதுமக்களும் சில்லறை விற்பனையாளர்களும் குவி ந்தனர். விலையும் அதிகரித்து காணப் பட்டது.
காய்கறிகளுக்கு கட்டுபடியான விலை: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை,மே 1 தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக் காய் போன்ற காய்கறிகளுக்கு கட்டுப் படியான விலை கிடைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் விலை கடும் வீழ்ச்சி யடைந்திருப்பதால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை உழவர்கள் சாலை யோரங்களிலும், குப்பை மேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விலை வீழ்ச்சியிலிருந்து உழவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள் முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும் என்று அவர் கூறி யுள்ளார்.
சென்னை மதுரை மார்க்கத்தில் ரயில் வேகம் அதிகரிக்கப்படும்
சென்னை. மே 1- நாடு முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதி கரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக் குள் இந்த 53 வழித் தடங்களிலும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சென்னை-மதுரை ரயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். மேலும் ரயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும். 130 கி.மீ. வேகத்தை ரயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரயில்வே அமைச் சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரக்கோணம்-மைசூர், ஜோலார் பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர், கண்ணூர்-கோழிக்கோடு, திருவனந்தபுரம்-மதுரை, ஜோலார் பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது சென்னை- பெங்களூரு-மைசூர் வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக் கப்பட்டு வருகிறது. ஜோலார் பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர் வழித் தடத்தில் வேகம் அதி கரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும். தெற்கு ரெயில் வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நா டகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத் துக்கு ரயில்களின் வேகத்தை அதி கரிப்பதற்கான பணிகள் தொடங் கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவிப்பு திருமாவளவன் வரவேற்பு
சென்னை, மே 1 சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12மணி நேர வேலை என்னும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறி வித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வர வேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொழிலாளர்கள் ஒன்று கூடினால் உரிமைகளை வென்றெடுக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் இயலும் என்பதற்குச் சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கு கோ-ஆப்டெக்சில் சீருடை
சென்னை, மே 1- மாநகராட்சியுடன் புதிதாக இணைக் கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 25,628 மாண வர்களுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத் தில் கோ-ஆப்டெக்ஸில் சீருடை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வரு கிறது. சென்னை மாநகராட்சியில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளி கள் இயங்கி வருகின்றன. இப்பள்ளி களில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 29,132 மாணவர்கள் படிக்கின்ற னர். இவர்களுக்கு கடந்த ஆண்டு கோ- ஆப்டெக்ஸில் சீருடை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்க ளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சீருடை வழங்குவது நடை முறையில் உள்ளது. சென்னை மாநகராட்சி எல்லையில், பள்ளிக் கல்வித்துறையின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களின்கீழ் இயங்கி வந்த 139 பள்ளிகள், கடந்த மார்ச் மாதம் முதல்சென்னை மாநக ராட்சி நிர்வாகத்தின்கீழ் இணைக் கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25,628 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்தில் புதிய சீருடை கள் கோ-ஆப்டெக்ஸில் வாங்க மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்து 335 மாணவர்களுக்கு தலா ரூ.376 செல விலும், 13 ஆயிரத்து 293 மாணவி களுக்கு தலா ரூ.610 செலவிலும் 2 செட் சீருடைகள் வாங்கப்பட உள்ளது.
விவாகரத்துக்கு 6 மாத கட்டாயக் காத்திருப்பை தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம்!
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுதில்லி, மே 1 - பரஸ்பரம் பிரிய விரும்பும் தம்பதி களை சட்டப்பிரிவு 142-ன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்காமலேயே விவாகரத்து வழங்க லாம்; 6 மாத கட்டாயக் காத்திருப்பு காலத்தை தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் கணவன் மனைவி இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்துகொள்ள விரும்பினாலும், இந்த விவாகரத்தைப் பெற 6 மாதங்கள் கட்டாய காத்திருப்பு கால மாக இருக்கிறது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்து டன் விவாகரத்து கோரி விண்ணப் பிக்கும் போது, இந்து திருமணச் சட்டத்தின் ‘13பி’ பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள கட்டாயக் காத்திருப்பு காலத்தை உச்ச நீதிமன்றம் 142-வது பிரிவின் கீழ் தள்ளுபடி செய்ய முடியுமா? என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, குடும்பநல நீதி மன்றங்களில் நடக்கும் நீண்ட விசார ணைகளைத் தவிர்த்து, பரஸ்பர சம்மதம் இருந்தால் நேரடியாக விவா கரத்து தர, சட்டத்தில் இடமுள்ளதா? என்று கேட்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையில், சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ். ஒகா, விக்ரம் நாத் மற்றும் ஜே.கே. மகேஸ்வரி ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அர சியல் சாசன அமர்வில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்மீதான வாதங்கள் முடி வடைந்த நிலையில், 2022 செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “மீண்டும் ஒன்றுசேரவே முடியாத மணமுறிவு என்ற சூழலில், பரஸ்பர சம்மதம் இருந்தால் குடும்ப நல நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தால் விவா கரத்து வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். இது பொது மக்களின் அடிப்படைக் கொள்கைகளை மீறாது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது சட்டப் பிரிவின் கீழ் விவாகரத்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதி காரங்களைப் பயன்படுத்த முடியும். இதில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கவே செய்கிறது. அதேநேரம் பிரிவு 142 அடிப்படை உரிமைகள் கீழ் பரிசீலிக்கப்பட வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம்’’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.