states

img

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் : மேலும் பலருக்கு தொடர்பா?

மதுரை, டிச. 2 - அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரியான அங்கித் திவாரி, அரசு மருத்துவரிடம் ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டுள்ள நிலையில், மதுரையிலுள்ள அம லாக்கத்துறை மண்டல துணை அலு வலகத்திற்குள் புகுந்து தமிழ்நாடு அர சின் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். வெள்ளிக்கிழமையன்று மாலை மதுரை கோசாகுளத்தில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்தி 3  மடிக்கணினிகளை பறிமுதல் செய்த  லஞ்ச ஒழிப்புப் போலீசார், பின்னர்,  மாலை 6 மணிக்குத் துவங்கி சனிக்கிழ மை காலை 7 மணிவரை அமலாக்க த்துறை மண்டல துணை அலுவலகத்தி லும் சுமார் 13 மணிநேரம் அளவிற்கு விடிய விடிய இந்த சோதனையை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அங்கித் திவாரி மற்றும் அரசு  மருத்துவர் இடையிலான தொலை பேசி உரையாடல், தகவல் பரிமாற்றங் கள் மூலம் இந்த லஞ்ச விவகாரத்தில், அமலாக்கத்துறையின் உயர் அதிகாரி கள் பலருக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை யினர் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறை யாக அமலாக்கத்துறை அலுவலகத்திற் குள் நுழைந்து மாநில லஞ்ச ஒழிப்புப்  போலீசார் பல மணிநேரம் சோதனை நடத்தி அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி  உதவிக் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர், திண்டுக்கல் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் குழந்தைகள் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், உதவி கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும், திண்டுக்கல் பழனி  சாலையில் தனியார் மருத்துவமனை யும் நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில காவல் துறை யின் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு சார்பில் சொத்து குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக உத்தரவு எனக் கூறி ரூ. 3 கோடி பேரம் இந்நிலையில், முடிந்துபோன இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்குமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து தங்க ளுக்கு உத்தரவு வந்துள்ளதாகவும் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சுரேஷ்பாபுவை மதுரை மண்டல துணை அலுவலக அமலாக்க த்துறை அதிகாரி அங்கித் திவாரி (32) தொடர்பு கொண்டுள்ளார். அத்துடன் அமலாக்கத் துறை நடவடிக்கையைக் கைவிட வேண்டுமெனில் ரூ. 3 கோடி லஞ்சமாகத் தர வேண்டும் என்று  கூறியுள்ளார். இறுதியாக ரூ. 51 லட்சம்  என்று பேரம்பேசி, அதில் முதல் தவ ணையாக ரூ. 20 லட்சத்தை நவம்பர்  1 அன்று அங்கித் திவாரி பெற்றுள் ளார். எஞ்சிய தொகை ரூ. 31 லட்சத்தைக் கேட்டு, அங்கித் திவாரி தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்தார். இதனால் விரக்தியடைந்த சுரேஷ்பாபு, திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் பொறியில் சிக்கினார்

இதையடுத்து, ரசாயனப் பொடி  தடவிய ரூ. 20 லட்சத்தை சுரேஷ்பாபு விடம் கொடுத்த ஊழல் தடுப்பு,  கண்காணிப்புப் பிரிவு, இந்தப் பணத்தை சுரேஷ்பாபு, வெள்ளிக்கிழ மை காலை திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் மில்மேடு (தோமையார்புரம்) அருகே காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ. நாகராஜன், காவல் ஆய்வாளர்கள் ஜெ. ரூபா கீதா  ராணி, பி. பழனிச்சாமி ஆகியோர் தலை மையிலான போலீசார், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி யைப் பிடிக்க முயன்றபோது, மத்தியப் பிரதேச மாநில பதிவு எண் கொண்ட காரில் மதுரை நோக்கி தப்பியுள்ளார். 

20 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடக்கிய போலீசார்

எனினும், சுமார் 20 கி.மீ. தூரம் அவரை விரட்டிச் சென்ற போலீசார் கொடைரோடு சுங்கச் சாவடிக்கு தகவல் கொடுத்து, அங்கிருந்த ஊழி யர்களின் உதவியுடன் அங்கித் திவாரி யைப் பிடித்தனர். அங்கிருந்து திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்கா ணிப்பாளர் அலுவலகத்துக்கு அழை த்துச் சென்று, அங்கு ஊழல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் (தென்  சரகம்) வி. சரவணக்குமார் தலைமை யில், வெள்ளிக்கிழமை மாலை வரை விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரைக் கைது செய்தனர். சோதனையைத் தடுக்க முயன்ற ஒன்றிய அரசின் காவல் படை முன்னதாக மதுரை மண்டல அம லாக்கத்துறை துணை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்த சென்ற நிலையில், அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு  தெரிவித்தனர். எனினும், தமிழ்நாடு காவல்துறையின் உதவியுடன் உள்ளே  நுழைந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடை யே, நள்ளிரவில் அங்கு சோதனை நடந்த போது கோவையில் இருந்து ஒன்றிய அரசின் காவல் படையான  சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியுடன் மதுரை வந்து  இறங்கினர். அவர்கள் அமலாக்கத்து றை அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை தமி ழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதி க்கவில்லை. சிஆர்பிஎப் வீரர்களை, 5  மணிநேரத்திற்கும் மேலாக அலு வலகத்திற்கு உள்ளே வராதவாறு வெளியிலேயே நிற்க வைத்து, தங்க ளின் சோதனையை நடத்திமுடித்தனர்.

மோடி ஆட்சியில் அமலாக்கத்துறையிலும் ஊழல்! விசாரணை நடத்தி வெள்ளையறிக்கை வெளியிடுக!

மோடி ஆட்சியில் அமலாக்கத்துறையிலும் ஊழல் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கெனவே ரூ. 3 கோடி பேரம் பேசி, ரூ. 31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ. 20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.

இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சில நாட்கள் முன்புதான் ராஜஸ்தானில் இதேபோல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார். ஏற்கெனவே, ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பாஜக-வைச் சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பாஜக-வினர் வீட்டில் சோத னைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது என அடுக்கடுக்கான முறைகேடுகளைப் பார்த்து வருகிறோம். சுயேச்சையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்கள் அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல், முறை கேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான  நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.