states

மலக்குழி மரணங்களை தடுக்க தனி கண்காணிப்புக்குழு அமைத்திடுக!

சென்னை, பிப். 10 - சென்னை புறநகர் பகுதிகளில் நிகழும் தொடர் மலக்குழி மரணங்களை தனிக்குழு அமைத்து தடுக்க வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன் ஆகியோர், துணை ஆட்சியர் கவுசல்யா விடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் (மண்டலம் 14) காரப்பக்கத்தில் பிப்.7 அன்று பாக்கியம் பிரகதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியை (மலக் குழி) சுத்தம் செய்தபோது செந்தில் குமார் (வயது 47) என்பவர் மரணமடைந்தார். பெஸ்ட மேனேஜ்மென்ட் என்கிற நிறு வனம், செந்தில் குமாரை இந்த பணியில் ஈடுபடுத்தியது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் இது போன்ற மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நிகழ்கிறது. ’மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதை தடுத்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் - 2013’ஐ மீறும் வகையில் இத்தகைய மரணங்கள் நிகழ்கின்றன. இதில் தொடர்புடையவர்கள் தப்பிக்காத வகையில் வழக்குகளை பதிந்து, உரிய இழப்பீடுகளையும் வழங்க வேண்டும். சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், திருவொற்றியூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகள் 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன்  இணைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளை கடந்தும் இந்தப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக அமைக்கப் படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தொட்டி முறை நடைமுறையில் உள்ளது. சென்னையில் 2020 - 2022 செப்டம்பர் மாதம் வரை 33 பேர் மலக்குழியில் இறந்துள்ள னர். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 14 மற்றும் 15 ஆகியவற்றில்தான் அதிக இறப்பு நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த இரண்டு மண்டலங்களில் தனி குழு அமைத்து, கண்கானித்து சட்ட நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.