சென்னை, ஜூலை 1- தொழிலாளர் நலன் காக்கும் நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஜூன் 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜூலை 16 ஒப்பந்த தொழிலாளர் கருத்தரங்கம்
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மிக வேகமாக பரவி வரும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை, பணிப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பற்ற நிலை, சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட எந்தவித உத்தரவாத மும் இல்லாத லட்சக்கணக்கான தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிஐ டியு சென்னை தொழிற்பாதை மாவட்டங்களின் சார்பில் ஜூலை 16 அன்று மீஞ்சூரில் ஒப்பந்தத் தொழிலாளர் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
ஜூலை 18 கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளருக்கான நல வாரிய பணப் பயன்கள் உயர்த்தப்பட்ட நிலையிலும் அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்து கட்டுமான தொழி லாளர் சம்மேளனத்தின் சார்பில் மாவட்ட தலை நகரங்களில் ஜூலை 18 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.
ஜூலை 25 முறைசாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
முறைசாரா தொழிலாளர் நல வாரிய செயல் பாட்டை சீர்படுத்த வேண்டும். ஆன்லைன் பதிவை முறைப்படுத்த வேண்டும். பணப்பயன் களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஓய்வூதிய குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25 அன்று மாவட்ட நல வாரிய அலுவல கங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத் தப்படுகிறது.
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவல்
மத்திய தொழிற்சங்கங்களின் தொடர் நட வடிக்கையாக மாநில அளவிலான அனைத்து சங்க மாநாடு திருச்சியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
‘விடியலை நோக்கி இந்தியா’ கலை இரவு
சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத்தொழிலாளர் சங்கம் கூட்டு நடவ டிக்கையின் ஒரு பகுதியாக விடுதலை நாள் தியா கத்தை பறைசாற்றும் வகையில் ஆகஸ்ட் 14 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விடியலை நோக்கி இந்தியா என்ற தலைப்பில் கலை இரவு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்
சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர், வாலி பர், மாணவர், அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி, காப்பீடு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைப்புகளை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிறப்பு கருத்தரங்கம் பேரணியுடன் நடத்துவது என்றும், இந்த பேரணிக்கு முன்னதாக ஜூலை 24 -28 மாவட்ட அளவில் துண்டுபிரசுர பிரச்சாரம் செய் வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண் டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஒப் பந்த மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையை திரும் பப்பெற வேண்டும். சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக அமைக்கப்பட்ட குழு பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். சுகி, சுமோட்டோ தொழிலாளர்களின் உரி மைக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்ட 64 தொழிலாளர்கள் மீதான பணிநீக்க நட வடிக்கையை ரத்து செய்து பணி வழங்கிட வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல் பட்டு வந்த இ-சேவை மையங்கள் மூடப்பட்ட தன் விளைவாக ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும். தொழிற்சங்க பழிவாங்கல் நட வடிக்கையாக சங்க செயலாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.
40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக!
அங்கன்வாடி மையங்கள் இணைப்பு என்ற பெயரில் மூடும் போக்கை கைவிட வேண்டும். காலியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி யிடங்களை நிரப்பிட வேண்டும். 20 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணி புரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தை போல கணினிமயப்படுத்தி விற்பனையை முறைப் படுத்த வேண்டும்.
தூய்மை பொறியியல் பிரிவு உருவாக்கிடுக!
மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதற்கு தடை சட்டம் 2013-ஐ நடைமுறைப்படுத்தாததால் கழிவு தொட்டில்களில் மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன. கழிவுகளை அகற்றுவதற்கு நவீன கருவிகளை பயன்படுத்த சென்னை பல்க லைக்கழகத்தில் தூய்மை பொறியியல் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். ஆட்டோ தொழிலில் ஓலா, உபேர் தனியார் ஆதிக்கத்தை குறைத்திட தமிழ்நாடு அரசு ஆட்டோ கட்டணத்தை தீர்மானிக்க தனி செயலி உருவாக்கிட வேண்டும். பீடித்தொழிலாளருக்கான ஊதிய உயர் வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும். திருவள்ளூர்,சேலம் மாவட்டங்களில் பீடி மற்றும் சுருட்டு தொழிலாளருக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தை உடனடியாக விநியோ கம் செய்திட வேண்டும்.
கூடுதல் மின்கட்டண வசூலை கைவிடுக!
மின்சார பயன்பாட்டு நேரத்தை நிர்ணயித்து பீக் அவர்ஸ் என்ற பெயரில் 20 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் என்ற பெய ரில் மறைமுக மின்சார கட்டணத்தை வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது. வகுப்புவாத உணர்வுடன் செயல்படும் குமரி காவல்துறை தொழிலாளர் போராட்டங்கள், ஜனநாயக இயக்கங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கும் போக்கு மாநிலம் முழுவதும் உள்ளது. குறிப் பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளின் இயக்கங் களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்படுவதும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு அனு மதி வழங்குவதுமான நடவடிக்கையில் கன்னி யாகுமரி மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது. காவல்துறையில் வகுப்பு வாத உணர்வுடன் செயல்படும் காவல்துறை யினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண் டும். தமிழ்நாடு அரசு எண்ணூர் -கோவளம் வரை யிலான கடற்கரை பகுதிகளில் சுற்றுலாத்தலம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கி பணிகள் துவங் கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை கிராமங்க ளில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும், வாழ்விடமும் பாதிக்கப்படுகிறது. எனவே தமி ழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.