states

தரமற்ற நிலக்கடலை விதையை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

தஞ்சாவூர், நவ.25 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு மார்கழி மாதப் பருவத்தில் விதைப்பு செய்வற்காக, வேளாண் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நிலக் கடலை விதைகள் முளைப்புத் திறன் இல்லாமல் இருப்பதால், கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளிக்கிழமை விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசிய தாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது மானாவாரி பகுதியில் நிலக் கடலை விதைக்கும் பணிகள் மும்முர மாக உள்ளது. இதற்காக வேளாண்மைத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கடலை விதைகள் முளைப்புத் திறன் இல்லாமல் உள்ளது. இந்த விதை களை கொள்முதல் செய்த அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வேளாண்மைத் துறையில் உள்ள விதைகள் முளைக்காததால், தனியார் வியாபாரிகள் நிலக்கடலை விதைக்கு தங்களது விருப்பத்துக்கு நிர்ணயித்து அதிக விலைக்கு விற்கின்றனர். இதனை வேளாண்மைத்துறையினர் கண்டுகொள்வதில்லை. மேலும், சம்பா பயிர்கள் வளரும் பருவத்தில் இருப்பதால் யூரியா உரம் தேவைப்படுகிறது. ஆனால் மாவட்டத்தில் யூரியா உரத்தட்டுப்பாடு உள்ளது. எனவே சீரான யூரியா உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருஆரூரான் சர்க்கரை நிலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ள நிலையில், அதே ஆலை நிர்வாகம் பெயரில் தற்போது கரும்பு சாகுபடி ஒப்பந்த நகல் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

கரும்பு விவசாயிகளை மோசடி செய்த முந்தைய நிர்வாகம், அதே பெயரில் தற்போது மோசடி செய்ய உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உடனடி யாக தலையிட வேண்டும் என்றனர் அதற்கு பதிலளித்த பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர்: மாவட்டத்தில் விவசாயி களுக்கு விநியோகம் செய்ய 55.5 மெட்ரிக் டன் நிலக்கடலை விதை  வரவழைக்கப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கடலை தொடர்பாக வேளாண்மைத் துறையின் விதைச் சான்று பிரிவினர் முளைப்புத்திறன் தொடர்பாக ஆய்வு செய்து உரிய விளக்கமளிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் பாதிக்காக வகையில் அந்த நிலக்கடலை விதைகளை விநியோ கம் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். முன்னதாக, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘‘உய்யக் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் 20 க்கும் மேற்பட்ட ஏரிகள்  பாசனம் பெற்று ஒரு போகம் மட்டுமே  சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு  மழை நீரின் உதவியோடு அனைத்து ஏரி களுக்கும் தண்ணீர் கிடைத்து விவ சாயப் பணிகள் முழு வேகத்தோடு நடைபெற்று வருகிறது. 

ஆனால் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே உய்யக்கொண்டான் வாய்க்காலில் மேலாகச் செல்லும் சோழகம்பட்டி காட்டுவாரியில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வருவது தடைப்பட்டது.  விவசாயிகள் தண்ணீர் கேட்டு போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட் டது. மாற்று வழியில் தண்ணீர் தருவ தாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால் விவசாயிகள் நம்பிக்கையோடு விவ சாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  ஆனால் ஆற்றுப் பாசனக் கோட்டமோ இதுவரை குறைந்த பட்சம், ஆகாயத்தாமரை உள்ளிட்ட படர்ந்து கிடக்கும் செடிகளை அகற்றும் பணியைக் கூட முறையாக செய்யவில்லை. மேலும், தற்போது எல்லா ஏரிகளுக்கும் நீர் வழங்கும் ஏரியான வாழவந்தான் கோட்டை ஏரியிலேயே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் வேறு சில ஏரிகளி லும் தண்ணீர் இல்லை. இது விவ சாயிகளுக்கு மிகுந்த அச்சத்தையும் கவலையும் உருவாக்குவதாக உள்ளது. பொதுவான விவசாயிகள் சென்று பார்க்கிற போது முறையான அணுகுமுறையோ பதிலோ கிடைக்கவில்லை. 

எனவே உடன் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் கிடைத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கரும்பு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவ சாயிகளுக்கு, இதுவரை தள்ளுபடித் தொகை விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது.  பலமுறை போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் தருவதாக ஒப்புக்கொண்டும் இதுவரை பணம் வழங்கப்படாததால், விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.  த,வி.ச மாவட்டத் தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் பி.செந்தில்குமார் அளித்த  மனுவில், ‘‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும், அவர்கள் கோரியுள்ள அளவு நிலத்திற்கான கடன்களை முழுமையாக வழங்கிட வேண்டும். உரத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உரம் வழங்கிட வேண்டும். உர ஒதுக்கீட்டை பணமாக அளிக்கக் கூடாது. 

பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவித் திட்டம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பான்மை விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நிதி கிடைக்கப்பெறவில்லை. எனவே, எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்ட நிதி வழங்கிட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்திற்கு பயிர் சேத அளவீட்டை கணக்கிட அதிக ஆபத்து உள்ள பட்டியலில் தஞ்சை மாவட்டம் உள்ளது.  எனவே, அப்பட்டியலில் இருந்து தஞ்சை மாவட்டத்தை எடுத்திடவும், ஆபத்து என பட்டியலிட்டு பயிர்ச் சேத பாதிப்பை அளவிடும் அரசாணை மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்து உண்மையான இழப்பீட்டை கிடைத்திட செய்ய வேண்டும்.  தேவையான உரங்கள் அனைத்தும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரக்கடை களில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.