states

சிறு, குறு தொழில்களை மேம்படுத்த எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை

கோயம்புத்தூர், பிப்.1- ஒன்றிய அரசு 2023 - 2024 -க்கான பட்ஜெட் டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும்  தூண்களாக இருந்து வரும் சிறு, குறு  தொழில்களுக்கான அறிவிப்பில் எதிர்பார்ப்பு கள் ஒன்றும் பெரிய அளவில் இல்லாதது பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அளிப்ப தாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிரதாப்சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, சிறு, குறு  தொழில்களுக்கு என வங்கியில் வாங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் அளிப்பதிற்காக ரூ.9 ஆயிரம் கோடி மட்டும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அது போது மானதாக இல்லை, மேலும் இந்த பட்ஜெட் என்பது சிறு, குறு தொழில்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது சம்மந்தமாக எவ்விதமான அறிவிப்பும் இல்லை, மேலும் சிறு, குறு தொழில்களுக் கான கடன் வழங்குவதில் வட்டி சதம்  குறைப்பு எதிர்பார்ப்பும் அறிவிக்கப்பட வில்லை.  ஜிஎஸ்டியில், சிறு, குறு தொழில்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்கப்படும் என்ற  அறிவிப்பும் இல்லை, சிறு, குறு தொழில்களுக் கான தனி அமைச்சகம் அறிவிப்பு எதிர்பார்த் தோம் அதுவும் இல்லை, மூலப்பொருள் களின் விலை நிர்ணயம் கமிட்டி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம் இல்லை, 2020 முதல் 2022 வரை ஏற்பட்ட தொழில் நெருக்கடியில் இருந்து குறுந்தொழில்கள் மீண்டுவர வங்கியில் கடன் பெற்ற சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு அபராத வட்டி மற்றும் கொரோனா காலத்துக்கான வட்டிகள் தள்ளுபடி எதிர்பார்த்தோம் இல்லை, தனி கடன் திட்டம் எதிர்பார்த்தோம் இல்லை, எதுவும் இல்லை என்பதற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் உள்ளது. மொத்தத் தில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்த  எவ்விதத்திலும் தனி கவனம் செலுத்தப் படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.