சென்னை,பிப்.14- வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க, அருகில் உள்ள காவல் நிலையத்துடன் ஏடிஎம் அலாரத்தை இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத் தில் 4 ஏடிஎம்களை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்த வர்களைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதில் காவல்துறை யினர் உறுதியாக உள்ளனர். இதையடுத்து, தமிழ்நாட்டி லுள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 51 வங்கிகளின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய டிஜிபி, அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தி னார். வங்கி, ஏடிஎம் மையங்களிலுள்ள பணத்தைக் கண்காணிக்க, மறை முக கேமராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டு மின்றி, அருகில் உள்ள காவல் நிலை யங்களில் ஒலிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ரகசியக் கேமராக்களை யும் பொருத்த வேண்டும் என்று டிஜிபி கூறினார். இவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவ தாக வங்கி அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.