states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக எம்எல்ஏ கைது கோரி போராட்டம்!

பாஜக எம்எல்ஏ-வும், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (KSDL) நிறுவனத்தின் தலைவருமான மதல் விருபாக்சப்பாவும், அவ ரது மகன் பிரசாந்த் மதலும் காண்ட்ராக்டர்களிடம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களின் வீடு, அலுவலகத்திலிருந்து ரூ.7 கோடியே 70 லட்சத்திற்கு கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டுள்ளது. இதனால், கேஎஸ்டிஎல் பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், மதல் விருபாக்சப்பாவைக் கைது செய்யக் கோரி, முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.

‘கஸ்பா இடைத்தேர்தல் வெறும் முன்னோட்டமே!’

மகாராஷ்டிர மாநிலம் கஸ்பா பெத் சட்டமன்றத் தொகுதி 1995 முதல் 2022 வரை பாஜக வசமே இருந்து வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு செல்வாக்  கான பகுதி என்று இதனைக் கூறுவார்கள். ஆனால், அண்மையில் நடைபெற்ற  தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர தங்கேகர் 10,915 வாக்கு வித்தி யாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில், “கஸ்பா பெத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் புத்திசாலிகள். அவர்கள் மகாராஷ்டிராவில் ஆளும் அரசுக்கு மிகப்பெரிய அடியினைக் கொடுத்துள்ளனர். இது வெறும் முன்னோட்டம்தான். மகாராஷ்டிரம் பார்க்க வேண்டியது இன்னும் இருக்கிறது” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

திரிபுரா வன்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,”தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் திரிபுராவில் நமது தோழர்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கமல்பூர்,சன்ட்ரி பஜார்,பிஷால்கர் ஆகிய பகுதிகளில் சிபிஎம் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பாஜக-வும் பிரதமரும் வாய் கிழிய பேசும் ஜனநாயகம் இதுதானா? மிக கொடூரமான இந்த தாக்குதல்களை ஏவிய பாஜகவின் வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம். திரிபுரா மக்கள் ஒன்றுபட்டு ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பார்கள்” என கூறியுள்ளார்.

பெயரளவில் 144 தடை

தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்ட தினத்திலிருந்து (மார்ச் 2) அடுத்த 2 நாட்களுக்கு 144 தடை  நீடிக்கப்படுவதாக திரிபுரா காவல்துறை அறிவித்தது.  ஆனால் இந்த 144 தடை உத்தரவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. மிகவும்  சாதாரணமாக முக்கிய நகரங்கள்,  தெருக்களில்,  சில இடங்களில் போலீசார் உதவியோடும் பாஜக குண்டர்கள் வன்முறையை அரங்  கேற்றி வருகின்றனர்.

மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதில் திடீர் சிக்கல்!

ஷில்லாங், மார்ச் 4- மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை யில், 26 இடங்களில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய  மக்கள் கட்சி (NPP) தலைவர் கான்ராட் சங்மா,  வெள்ளிக்கிழமையன்று ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்தார். அப்போது, பாஜகவின் 2 எம்எல்ஏ-க்கள், மலை யக மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்எல்ஏ-க்கள்  மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 32 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கடி தம் அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில்தான், மலையக மக்கள் ஜனநாயக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  “எங்கள் கட்சியின் எம்எல்ஏ-க்கள் மெத்தோடியஸ் திஹர், ஷாக்லியர் வார்ஜ்ரி ஆகிய இருவருக்கும், என்பிபி கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை  வழங்க எந்தவித அங்கீகாரமும் அளிக்கவில்லை” என்று கூறியுள்ளது.  அத்துடன், என்பிபி கட்சிக்கு வழங்கி வந்த ஆதர வைத் திரும்பப் பெறுவதாகவும் மலைய மக்கள்  ஜனநாயக கட்சியின் தலைவர் கே.பி. பன்ங்னியாங், செயலாளர் பன்போர்லாங் ரிந்தாதியாங் ஆகி யோர் அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில், மேகாலயாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேகாலயாவில் ஆட்சி அமைப்பதற்கு 31 எம்எல்ஏக்க ளின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில், ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 11, காங்கிரஸ், திரிணா முல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 5, மக்கள் குரல் கட்சி 4, மலையக மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு தலா 2 என மொத்தம் 29 பேர் எம்எல்ஏ-க்கள் உள்ளனர். சுயேச்சைகள் இரு வர் இந்த அணியை ஆதரிக்கும் பட்சத்தில் மேகாலயா வில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது

சென்னை,மார்ச் 4- அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கரின் உதவியாளர் ரவி, அரசு வேலை வாங்கித் தருவதாக ராணிப் பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணான முத்துலட்சுமி தலைமை செயலகத்தில் புகார் அளித்தார். அதில், விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி அரசு வேலையை  அவர் வாங்கி தரவில்லை. இதனால் நான், கொடுத்த பணத்தை கேட்டேன். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை ஏமாற்றி மிரட்டல் விடுக்கும் ரவி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த ஆணையர்சங்கர் ஜிவால் உத்தர விட்டார்.  இதைத் தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவின் வேலை மோசடி தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் உதவியாளரான ரவி, முத்துலட்சுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடு பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதை யடுத்து ரவியை கைது செய்தனர். ஓட்டு நர் விஜய் என்பவரும் கைது செய்யப்பட் டுள்ளார். கைதான ரவி தற்போது தலைமை செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறை யில் உதவி பிரிவு அலுவலராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில்தான் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

போலி டாக்டர் பட்டம் விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை,மார்ச் 4- போலியாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் இயக்குநரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங் களுக்கு போலியான கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.  அண்ணா பல்கலைக்கழக பெயரை தவறாக பயன்படுத்தியதால் துணை வேந்தர் அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்கு நர் ராஜூ ஹரிசை காவல்துறையினர் தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவான அவர் கைதுக்கு பயந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சூதாட்டத்தில்  ரூ.20 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

சென்னை,மார்ச் 5- ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 20  லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரதிநிதி வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த வினோத்குமார் திருமண மானவர். அவருக்கு இரண்டு குழந்தை கள் உள்ளன. தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். அதனை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வட மாநில தொழிலாளர்கள் குறித்து  வதந்தி பரப்பியவர்களை தேடும் போலீஸ்

சென்னை,மார்ச் 4- வட மாநில தொழிலாளர்கள் விவ காரம் தொடர்பாக வதந்தி பரப்பிய தாக 3 பேர் மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இவர்களை  கைது செய்ய தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங் களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்க ப்படுவதை போலவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி  வருகிறது. இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறி வித்துள்ளது. இந்தச் சூழலில் வதந்தி பரப்பிய வர்கள் மீது காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதன்படி, திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும்  திருப்பூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையங்களில் தைய்னிக் பத்திரிகையின் ஆசிரியர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. தூத்துக்குடி மாவட்டம், சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாத் உமாராவ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. மேலும், தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு காவல் துறை தலைவர்சைலேந்திர பாபு தெரி வித்துள்ளார்.

“வெளியேறி விடுங்கள்”ரஷ்ய ஆதரவு அமைப்பு ஆலோசனை

கீவ், மார்ச் 4- முழுவதுமாக ரஷ்யப் படைகள் முற்று கையிட்டுள்ளதால், பாக்முட் நகரிலிருந்து வெளியேறி விடுமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு ஆலோசனை வழங்கப் பட்டிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் “சிறப்பு ராணுவ நடவடிக்கை” முழு வீச்சில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்ய மொழி  அதிகமாகப் பேசுபவர்கள் வசிக்கும் டோனெட்ஸ்க் பகுதியை விடுவிப்பதில் ரஷ்யா முழு கவனம் செலுத்துகிறது. அப் பகுதியில் உள்ள பாக்முட் நகரை முற்றிலு மாக ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்துள் ளன. உக்ரைன் ராணுவம் வெளியேற ஒரே யொரு சாலை மட்டும்தான் எஞ்சியிருக் கிறது. இந்நிலையில்தான் ரஷ்ய ஆதரவு  அமைப்பின் தலைவர்களில் ஒருவரான யெவ்ஜெனி பிரிகோஸின், “டொனெட் ஸ்க் பகுதியில் உள்ள இந்த நகரம் முழுமை யாக ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப் பட்டு விட்டது. தங்கள் படைகளை அங்கி ருந்து வெளியேறச் சொல்வது உக்ரை னுக்கு நல்லது. இதை உடனடியாக ஜெலன் ஸ்கி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், உக்ரைன் படைகள் வெளியே றும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படு கிறது. சேதமடைந்த சாலைகளைச் சரி செய்வதிலும், போர் நடந்து கொண்டி ருக்கும் இடத்திற்கு மேலும் பல படை வீரர்களை நகர்த்துவதிலும் அவர்களின் கவனம் இருக்கிறது. ரஷ்யப் பீரங்கி களை இவர்கள் எதிர்கொள்வது சாத்திய மில்லை என்று ரஷ்ய ஆதரவுப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் சந்திப்பு: பிரதமர் மோடி மகிழ்ச்சி! 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, உல கக் கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவன முதலாளியுமான பில் கேட்ஸ் தில்லியில் சந்தித்து உரையாடியுள் ளார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பில்கேட் ஸை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தினோம். சிறந்த மற்றும் நிலையான பூமியை உருவாக்குவதற்கான அவரது கொள்கை தெளிவாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தி பேசிய 12 பேர் கொலை என பாஜக நிர்வாகி வதந்தி!

“தமிழ்நாட்டில் இந்தி பேசிய 12 புலம்பெயர் தொழிலாளர்கள் படுகொலை” என உ.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ், டுவிட்டர் சமூகவலைதளம் வதந்தி பரப்பியிருந்தார். இந்த வதந் தியை, ஏனைய உ.பி. பாஜக தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்க ளும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இது வடமாநிலங்களில் பதற்றத் தையும் பீதியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரசாந்த் உமாராவ், செய்தித் தாளில் போலி செய்தி வெளியிட்ட ‘தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி செய்தித்தாளின் தலைமை ஆசிரியர், ‘தன்வீர் போஸ்ட்’ என்ற டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்வீர் ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது புலம்பெயர் தொழிலா ளர் பற்றிய பதிவை பிரசாந்த் உமாராவ் நீக்கியுள்ளார்.

சோனியா காந்திக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு இதய மருத்துவத் துறை மூத்த  மருத்துவர் அருப் பாசு தலைமை யிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரு கின்றனர். சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிப்பில் இருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரி வித்து உள்ளனர்.

மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு 

மதுபான கொள்கை முறை கேடு வழக்கில் தில்லி  துணை முதல்வர் மணீஷ் சிசோ டியாவை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன்வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர் ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும் சிபிஐ காவலில் உள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனி டையே, சனிக்கிழமையன்று பிற் பகல் 2 மணிக்கு சிபிஐ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில் நிகழ்ந்த மிகவும் கொடூர மான ரயில் விபத்தில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். 350 பேர் பயணம் செய்து கொண்டிருந்த தொடர் வண்டி சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதால் பெரும் விபத்துக்குள்ளாகி யது. கொல்லப்பட்டவர்களில் 52 மரபணு சோதனைகள் மூல மாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலா னவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது கூடுதல் சோக மானதாகும்.

நடுநிலை வகிக்கக்கூடிய ஆஸ்திரியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான சண்டையில் தலையிட முடியும் என்று செக் குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஜெமன் ஆலோசனை  தெரிவித்துள்ளார். மார்ச் 8 அன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ஜெமன், தங்கள் நாட்டுக்கு வந்துள்ள ஆஸ்திரிய ஜனாதி பதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு கூறியிருக்கிறார். மார்ச் 9 அன்று செக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக பீட்டர் பாவ்லோ பதவியேற்கவிருக்கிறார்.

ஐரோப்பிய மண்ணைத் தாண்டி, பிற நாடுகளில் பிரான்சின் ராணுவ ம் இருப்பதை அஜெர்பைஜானின் ஜனாதிபதி இல்ஹாம் அலி யேவ் கடுமையாக நிராகரித்துள்ளார். ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளில் உள்ள குடியேற்ற நாடுகளின் மீது  பிரான்ஸ் மேற்கொண்ட கொடுமையான குற்றங்களுக்கும், படு கொலைகளுக்கும் பிரான்ஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். பல சிறிய நாடுகளின் இறையாண்மை மதிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.